பதிவு செய்த நாள்
25 ஜன2022
21:55
‘ஆகாசா ஏர்’ ரெடி ‘
ஆகாசா ஏர்’ விமான நிறுவனம், அதன் விமான சேவைகளை, மே மாதம் கடைசி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.ஏப்ரல் மாதத்தில், அதன் முதல் ‘போயிங் 737 மேக்ஸ்’ விமானம் வந்ததும், சேவைகளை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா துறையில் வேலை
கொரோனா பரவலால் மிகவும் பாதிப்புக்கு உள்ளான துறைகளில் ஒன்றான, பயணம் மற்றும் சுற்றுலா துறை, மீட்சி காணத் துவங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பரில் பணிக்கு ஆட்களை அமர்த்துவது, 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அனுமதி பெற்றது ‘ஓயோ’
பயண தொழில்நுட்ப நிறுவனமான ஓயோ, அதன் பங்குகளை, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதற்கு, கொள்கை அளவிலான ஒப்புதலை பெற்றுள்ளது. ஓயோ நிறுவனம் 8,430 கோடி ரூபாய் நிதியை திரட்டுவதற்காக, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் முயற்சியில் உள்ளது.
ரிலையன்ஸ் சந்தை மதிப்பு
‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகள் விலை, கடந்த இரண்டு நாட்களில் 7 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கடந்த இரு நாட்களில் 1.17 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துவிட்டது.
எச்.பி.சி.எல்., புதிய தலைவர்
‘ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, புஷ்ப் குமார் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் மனித வளத் துறையின் இயக்குனராக உள்ளார். இப்பதவிக்கு, 10 நபர்கள் பரிசீலிக்கப்பட்டதில், இறுதியில் ஜோஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பன்னாட்டு நிதியம் கணிப்பு
பன்னாட்டு நிதியம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை மாற்றி அறிவித்துள்ளது. இவ்வமைப்பு இதற்கு முன்பாக, நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என கணித்து இருந்த நிலையில், புதிய தொற்று காரணமாக, தற்போது 9 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|