பதிவு செய்த நாள்
25 ஜன2022
22:03
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய பயணியர் வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’யின் நிகர லாபம், கடந்த டிசம்பர் காலாண்டில், 48 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
1,941 கோடி ரூபாய்
மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 48 சதவீதம் சரிவைக் கண்டு 1,011 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இந்நிறுவனம், இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 1,941 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலாண்டில், இந்நிறுவனம் 4.31 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து, 23 ஆயிரத்து 246 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது.உலகளவில் ‘செமிகண்டக்டர் சிப்’ கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதை அடுத்து, மாருதி சுசூகியின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்த சரிவைக் கண்டுஉள்ளது.
வினியோக பாதிப்பு
தேவைகள் அதிகரித்திருந்த போதும், சிப் வினியோக பாதிப்பால், போதுமான அளவுக்கு உற்பத்தி செய்ய இயலாமல் ஆகிவிட்டது என, நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|