பதிவு செய்த நாள்
26 ஜன2022
21:32
புதுடில்லி:வருமான வரி சட்டம் ‘80 சி’ பிரிவின் கீழ் வழங்கப்படும் சலுகை வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும், காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, காப்பீட்டு நிறுவனங்கள் அரசுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளன.முக்கியமாக, 80 சி பிரிவின் கீழ், காப்பீடுகளுக்கான பிரீமியம் செலுத்துவதற்கு, குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு தனியாக விலக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஆயுள் காப்பீட்டை பெற மக்களை ஊக்குவிக்க முடியும் என இத்துறையினர் கருதுகின்றனர்
தற்சமயம் அனைத்துவகையான நிதி முதலீடுகளையும் ஒன்றாக கணக்கிட்டு, 80 சி பிரிவின் கீழ் 1.50 லட்சம் ரூபாய் வரி விலக்கு வழங்கப்படுகிறது.அத்துடன், ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு, தற்போது வசூலிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|