பதிவு செய்த நாள்
26 ஜன2022
21:35
புதுடில்லி:உலகளவில், தகவல் தொழில்நுட்ப சேவை துறையில், இரண்டாவது மதிப்பு மிக்க பிராண்டாக டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ நிறுவனம் உருவெடுத்துள்ளது. ‘பிராண்டு பைனான்ஸ்’ எனும் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூறப்பட்டுள்ளதாவது:உலகளவில், தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையில் அதிக பிராண்டு மதிப்புடன், இரண்டாவது இடத்தை டி.சி.எஸ்., பிடித்துள்ளது. மேலும், ‘இன்போசிஸ்’ உள்ளட்ட, ஐந்து இந்திய நிறுவனங்களும், ‘டாப் 25’ தகவல் தொழில்நுட்ப சேவை பிராண்டுகளில் இடம்பெற்றுள்ளன.இன்போசிஸ் மூன்றாவது இடத்திலும், விப்ரோ 7வது இடத்திலும், எச்.சி.எல்., 8வது இடத்திலும், டெக்மகிந்திரா 15வது இடத்திலும், எல்.டி.ஐ., 22வது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த ஆறு இந்திய பிராண்டுகளும், 2020 -– 22ம் ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துவரும் ‘டாப் 10’ தகவல் தொழில்நுட்ப சேவை பிராண்டுகளில் இடம்பெற்றுள்ளன. உலகின் மதிப்பு மிக்க மற்றும் வலிமையான தகவல் தொழில்நுட்ப சேவை பிராண்டாக, ‘அக்சென்சர்’ நிறுவனம் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆய்வில் ஐ.பி.எம்., நான்காவது இடத்துக்கு இறங்கியுள்ளது. டி.சி.எஸ். இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|