பதிவு செய்த நாள்
26 ஜன2022
21:40
புதுடில்லி:முகேஷ் அம்பானியின் ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ மற்றும் எரிசக்தி நிறுவனமான பி.பி., ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், மிகப் பெரிய மின்சார வாகன சார்ஜிங் மையத்தை டெல்லியில் துவங்கி உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், பிரிட்டனை சேர்ந்த பி.பி., நிறுவனமும் இணைந்து, இந்தியாவில், ‘ரிலையன்ஸ் பி.பி., மொபிலிட்டி’ எனும் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி, ஜியோ – பி.பி., எனும் பிராண்டு பெயரில் செயல்பாட்டினை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்நிறுவனம், டெல்லியில் மிகப் பெரிய சார்ஜிங் மையத்தை துவங்கி உள்ளது. இதற்கு முன்பாக இந்நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபரில், அதன் முதலாவது சார்ஜிங் மையத்தை மும்பையில் அமைத்தது. விரைவில் அடுத்தடுத்து சார்ஜிங் நிலையங்களை நாடு முழுக்க அமைக்க உள்ளது.
ரிலையன்ஸ் உடனான கூட்டு நிறுவனத்தில் பி.பி., நிறுவனத்துக்கு 49 சதவீத பங்குகள் உள்ளன. மீதி, 51 சதவீத பங்குகள் ரிலையன்ஸ் வசம் உள்ளது. பி.பி., நிறுவனம் இதில் 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.இந்த கூட்டு நிறுவனத்தின் வசம் தற்சமயம் 1,448 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|