வாகன சார்ஜிங் நிலையங்கள்  ஜியோ -– பி.பி., மும்முரம் வாகன சார்ஜிங் நிலையங்கள் ஜியோ -– பி.பி., மும்முரம் ...  சமத்துவமின்மையை குறைப்பதாக பட்ஜெட் இருக்க வேண்டும் சமத்துவமின்மையை குறைப்பதாக பட்ஜெட் இருக்க வேண்டும் ...
வணிகங்களை பிரிக்கும் திட்டம் மார்ச்சில் அறிவிக்கிறது வேதாந்தா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
21:43

புதுடில்லி:உலோகம் மற்றும் சுரங்க வணிகத்தில் ஈடுபட்டுள்ள ‘வேதாந்தா’ நிறுவனம், அதன் முக்கிய வணிகங்களை, தனித்தனியாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாற்றுவதற்கான திட்டத்தை, மார்ச் மாத இறுதிக்குள் அறிவிக்கும் என, அந் நிறுவன தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
ஏற்கனவே, துத்தநாக வணிகம் பட்டியலிடப்பட்ட துணை நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் அலுமினியம், இரும்பு, உருக்கு, எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களை தனித்தனியாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக பிரிக்க வேதாந்தா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அனில் அகர்வால் கூறியதாவது:வணிகங்களை பிரிப்பது என்பது மிகவும் இயல்பான விஷயாமாகும். சந்தை நன்றாக உள்ளது. உற்பத்தியும் நன்றாக இருக்கிறது. எனவே தனி நிறுவனங்களாக்குவது மதிப்பீட்டை உருவாக்கும் என நாங்கள் கருதுகிறோம். மார்ச் மாதத்துக்குள் இது குறித்த முழுமையான திட்ட வரைவை தெரிவிப்போம்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதம் கொண்டிருக்கிறோம். மிக அதிகமாக வரி செலுத்துகிறோம். 3 லட்சம் கோடி ரூபாயை வரியாக செலுத்துகிறோம். இந்தியா மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.இந்தியா அதிக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயு, துத்தநாகம் வெள்ளி ஆகியவற்றை இறக்குமதி செய்யக் கூடாது என கருதுகிறோம். இதன் காரணமாக, உற்பத்தியை அதிகரித்துள்ளோம். மேலும் மதிப்பை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)