பதிவு செய்த நாள்
26 ஜன2022
21:43
புதுடில்லி:உலோகம் மற்றும் சுரங்க வணிகத்தில் ஈடுபட்டுள்ள ‘வேதாந்தா’ நிறுவனம், அதன் முக்கிய வணிகங்களை, தனித்தனியாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக மாற்றுவதற்கான திட்டத்தை, மார்ச் மாத இறுதிக்குள் அறிவிக்கும் என, அந் நிறுவன தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார்.
ஏற்கனவே, துத்தநாக வணிகம் பட்டியலிடப்பட்ட துணை நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் அலுமினியம், இரும்பு, உருக்கு, எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகங்களை தனித்தனியாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாக பிரிக்க வேதாந்தா திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அனில் அகர்வால் கூறியதாவது:வணிகங்களை பிரிப்பது என்பது மிகவும் இயல்பான விஷயாமாகும். சந்தை நன்றாக உள்ளது. உற்பத்தியும் நன்றாக இருக்கிறது. எனவே தனி நிறுவனங்களாக்குவது மதிப்பீட்டை உருவாக்கும் என நாங்கள் கருதுகிறோம். மார்ச் மாதத்துக்குள் இது குறித்த முழுமையான திட்ட வரைவை தெரிவிப்போம்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதம் கொண்டிருக்கிறோம். மிக அதிகமாக வரி செலுத்துகிறோம். 3 லட்சம் கோடி ரூபாயை வரியாக செலுத்துகிறோம். இந்தியா மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.இந்தியா அதிக வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயு, துத்தநாகம் வெள்ளி ஆகியவற்றை இறக்குமதி செய்யக் கூடாது என கருதுகிறோம். இதன் காரணமாக, உற்பத்தியை அதிகரித்துள்ளோம். மேலும் மதிப்பை உருவாக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|