பதிவு செய்த நாள்
26 ஜன2022
21:46
புதுடில்லி:வாகன துறைக்கான, பி.எல்.ஐ., எனும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்க திட்டம், பசுமையான எதிர்காலத்துக்கு உத்வேகத்தை வழங்குவதாக இருக்கிறது. மேலும், தொழில்துறையை தன்னம்பிக்கை மிக்கதாகவும், உலகளவில் போட்டித் தன்மை கொண்டதாகவும் மாற்றும் என்றும்,‘டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், ஜப்பானின் டொயோட்டா மோட்டார் நிறுவனம் மற்றும், இந்தியாவின் கிர்லோஸ்கர் குழுமம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:மின்னணு மற்றும் மேம்பட்ட வேதியியல் செல்கள் ஆகியவற்றுக்கான ஊக்கத் திட்டத்தினால், நேரடியாக பயனடையும் துறைகளில் ஒன்றாக வாகனத் துறையும் உள்ளது.அதிக வெளிப்படைத் தன்மை மற்றும் சீர்திருத்தங்களை கொண்டு வருவதில், இந்திய அரசாங்கம் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளது.
வாகன தயாரிப்பு மற்றும் பாகங்கள் தயாரிப்பு துறையில், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்துக்கு, கிட்டத்தட்ட 115 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|