பதிவு செய்த நாள்
27 ஜன2022
21:50
புதுடில்லி:‘போட்’ எனும் பிராண்டு பெயரில், நுகர்வோர் மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், ‘இமேஜின்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 900 கோடி ரூபாய்க்கு புதிய பங்கு களும், 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடனை அடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வணிக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளது.கடந்த 2013ம் ஆண்டில், இந்நிறுவனம் துவக்கப்பட்டது. 2014ம் ஆண்டில், போட் எனும் பிராண்டு பெயரில் ஆடியோ சாதனங்களை சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது ஸ்மார்ட் வாட்சுகளையும் தயாரித்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|