பதிவு செய்த நாள்
28 ஜன2022
22:16
புதுடில்லி:‘மான்யவார்’ பிராண்டு நிறுவனமான, ‘வேதாந்த் பேஷன்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டை முன்னிட்டு, பங்கின் விலை 824 – 866 ரூபாய் என நிர்ணயித்து அறிவித்துள்ளது.
பாரம்பரிய ஆடைகளை, மான்யவார் எனும் பிராண்டில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது, வேதாந்த் பேஷன்ஸ் நிறுவனம். இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, பிப்ரவரி 4ம் தேதி துவங்கி, 8ம் தேதியுடன் முடிவடைகிறது.
துணிகர முதலீட்டாளர்களுக்கான பங்கு விற்பனை, பிப்ரவரி 3ம் தேதியன்று துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில், புதிய பங்குகள் எதுவும் இன்றி, முழுக்க முழுக்க நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன.
பங்கு வெளியீட்டின் போது மொத்தம் 3.64 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பரில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பித்திருந்தது.பரிசீலனைக்கு பிறகு, இம்மாதம் 18ம் தேதியன்று பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|