காப்பீடு பெறுவதில் இளைஞர்கள் ஆர்வம் காப்பீடு பெறுவதில் இளைஞர்கள் ஆர்வம் ...  கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரிப்பு கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 35 சதவீதம் அதிகரிப்பு ...
கோரப்படாத பாலிசி தொகையை கண்டறிவது எப்படி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2022
01:41

முதலீடு செய்வது, காப்பீடு பெறுவது போன்றவற்றின் நோக்கமே அவை அளிக்கும் நிதி பாதுகாப்பு பலன்களை பெறுவதற்காக தான். எனினும் பல்வேறு காரணங்களால் வைப்பு நிதி போன்ற முதலீடுகள் உரியவர்களால் கோரப்படாமல் விடப்படுவதும் உண்டு.

காப்பீடு பாலிசி தொடர்பான பலன்களும் இவ்வாறு கோரப்படாமல் விடப்படுகின்றன. எல்.ஐ.சி., காப்பீடு நிறுவனத்தில், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாலிசி தொகை கோரப்படாமல் இருப்பதாக, கடந்த ஆண்டு வெளியான தகவல் தெரிவிக்கிறது. இவ்வாறு கோரப்படாமல் இருக்கும் பாலிசி தொகையை கண்டறிவது தொடர்பான வழிமுறைகளை பார்க்கலாம்.

என்ன காரணம்?

பாலிசி முடியும் காலத்தில் அதற்கான பலன்பாலிசிதாரரை வந்தடையும். எனினும், பாலிசிதாரர் மறதிகாரணமாக அல்லது பாலிசிதாரர் இறந்த பின், ‘நாமினி’கள்கோராமல் இருப்பது போன்ற காரணங்களால் அந்த தொகை கோரப்படாமல் நிறுவனத்திடமே தங்கி விடலாம்.

பலவித பலன்கள்:

பாலிசிதாரர் திடீரென இறந்துவிடும் போது, அவரது சார்பில் கோரிக்கை சமர்ப்பிக்காவிடில் அந்த தொகை கோரப்படாமல் போகலாம். அதே போல, முதிர்வு தொகை, சர்வைவல் பலன், திரும்பி வழங்க வேண்டிய பிரிமியம் தொகைஉள்ளிட்ட பலன்களும் கோரப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது.

அறியும் வழி:

பாலிசி பலன் கோரப்படாமல் இருப்பதை கண்டறிய எளிய வழி உள்ளது. எல்.ஐ.சி., நிறுவன இணையதளத்தில் கோரப்படாத தொகைக்கு என உள்ள பகுதியில், தேவையான விபரங்களை சமர்ப்பித்து இதை அறியலாம், பாலிசி எண், பாலிசிதாரர் பெயர், பிறந்த தேதி, பான் கார்டு ஆகிய விபரங்களை இதற்காக சமர்ப்பிக்க வேண்டும்.

பெறுவது எப்படி?

பாலிசி தொடர்பாக கோரப்படாத தொகை இருப்பது தெரிய வந்தால், தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து, உரிய கே.ஒய்.சி., நடைமுறையை பூர்த்தி செய்து தொகையை பெற்றுக் கொள்ளலாம். தொடர்புடைய வங்கிக் கணக்கிற்கு மின்னணு முறையில் தொகை செலுத்தப்படும்.

எவ்வளவு காலம்?

பொதுவாக, 10 ஆண்டு காலம் பாலிசி தொகை கோரப்படாமல் இருந்தால், அந்த தொகை மூத்த குடிமக்கள் நலன் நிதிக்கு மாற்றப்படும். எனினும், இவ்வாறு மாற்றப்பட்ட பின், 25 ஆண்டுகளுக்குள் உரியவர்கள் தொகையை கோரலாம். அதன் பிறகு தொகை அரசு வசம் சென்றுவிடும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)