பதிவு செய்த நாள்
01 பிப்2022
21:52
புதுடில்லி:வீடுகள் விற்பனை, கொரோனா புதிய அலை பாதிப்புகளையும் மீறி, நடப்பு காலாண்டில் வலுவாக இருக்கும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘அனராக்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, அதன் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த இரண்டு அலைகளை போல இல்லாமல், ஒமைக்ரான் பாதிப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. ஜனவரியின் முதல் இரு வாரங்களில், சிறிய அளவிலான பாதிப்புகள் இருந்தன. ஆனாலும், விற்பனைக்கான விசாரணைகள் வலுவாகவே உள்ளன.ஒமைக்ரானை முன்னிட்டு, பெரிய அளவிலான கட்டுப்பாடுகள், தடைகளை மாநில அரசுகள்விதிக்கவில்லை.
இதனால் போக்குவரத்திலும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை.எனவே, இந்த காலாண்டில் முதல் 4 முதல் 6 வாரங்களில், குடியிருப்புகளுக்கான சந்தை வளர்ச்சி வேகம் குறைந்தாலும், அதன் பின் வலுவானதாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.
நாட்டின் முக்கியமான 7 நகரங்களில், வீடுகள் விற்பனை, கடந்த ஆண்டில் 71 சதவீதம் அதிகரித்து உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|