பதிவு செய்த நாள்
02 பிப்2022
21:57
புதுடில்லி:உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை, ஜனவரியில் 21 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாகவும்; வரும் மாதங்களில் மீட்சி காணப்படும் என்றும், தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’ தெரிவித்துள்ளது.அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இருசக்கர வாகன பிரிவு, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, தொடர்ச்சியாக 14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தாலும், உள்நாட்டில் விற்பனை ஜனவரியில் 21 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.வாகன விலையேற்றம், எரிபொருள் விலை அதிகரிப்பு, ஒமைக்ரான் குறித்த நுகர்வோர் மனநிலை ஆகியவை இருசக்கர வாகன விற்பனையை பெரிதும் பாதித்துள்ளது.
பிரீமியம் வாகன பிரிவில் ‘சிப்’ உள்ளிட்டவைகளின் வினியோக பிரச்னைகள் இன்னும் இருந்து வருகிறது.ஜனவரியில் விற்பனை சரிவைக் கண்டபோதிலும், வரும் மாதங்கள் குறித்து, இந்த துறையானது மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.
பட்ஜெட்டில், உள்கட்டுமானங்களுக்கான செலவு மற்றும் விவசாயத்தை அதிகரிக்கும் முயற்சிகள் ஆகியவை அறிவிக்கப்பட்டிருப்பதால், அதன் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|