பதிவு செய்த நாள்
04 பிப்2022
20:55
வாஷிங்டன்:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்துள்ள பட்ஜெட், மிகவும் சிந்தனை மிக்க கொள்கை கொண்டதாகும் என ஐ.எம்.எப்., எனும், பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது:இதுவரை வளர்ந்து வரும் சந்தைகளுக்கு, நிதி நிலைமைகளின் இறுக்கம் ஒரு பெரிய பிரச்னையாக மாறிவிடவில்லை.ஏனெனில், வளர்ந்து வரும் சந்தைகள், இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப வலு பெற உழைத்துள்ளன. மேலும், பணவீக்க அழுத்தங்களை எதிர்கொண்டதும், அவை விவேகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றன.
இந்தியா குறுகிய கால பிரச்னைகளை மட்டுமின்றி; நீண்டகால கட்டமைப்புக்கான மாற்றங்களை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசித்து வருகிறது. மேலும், மனித மூலதன முதலீடு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் சம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டை நான் படித்து பார்த்தபோது, அது, இந்தியாவுக்கான மிகவும் சிந்தனைமிக்க கொள்கைகளை கொண்டுள்ளதாக கருதினேன்.இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|