பதிவு செய்த நாள்
04 பிப்2022
21:12
மும்பை:ரிசர்வ் வங்கி, ஏப்ரல்மாதம் வரை, அதன் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்காது என கருதுவதாக, அமெரிக்க தரகு வங்கியான, ‘பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ்’ தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம், வரும் திங்களன்று துவங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தின் முடிவில், 9ம் தேதியன்று வட்டிவிகிதம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.இந்நிலையில் ரிசர்வ் வங்கி, ஏப்ரல் வரை ரெப்போ வட்டியை உயர்த்த வாய்ப்பில்லை என, பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.
உலகளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.இருப்பினும், இந்தியாவில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தாது என்கிறது, பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ்.
ரிசர்வ் வங்கி, 2020ம் ஆண்டு மே மாதம் முதலாக, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளாமல், 4 சதவீதமாகவே வைத்துள்ளது. இது, இந்தியாவில் இதுவரை இல்லாத குறைவான வட்டி விகிதமாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|