எல்.ஐ.சி., நிறுவன மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் எல்.ஐ.சி., நிறுவன மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாய் ...  பெரும் பணக்காரர்கள் பட்டியல்  அம்பானியை விஞ்சிய அதானி பெரும் பணக்காரர்கள் பட்டியல் அம்பானியை விஞ்சிய அதானி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2022
21:17

‘ஜியோ பிளாட்பார்ம்’ முதலீடு
முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘டூ பிளாட்பார்ம்ஸ்’ எனும் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை, 112 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளது.சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள இந்நிறுவனம், பிரணவ் மிஸ்திரி என்பவரால் துவங்கப்பட்டதாகும்.
பங்கு விலை அறிவிப்பு
‘அதானி வில்மார்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் பங்கின் விலை, 218 – 230 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,600 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
நுாறாண்டு கடந்த ‘பாஷ்’
தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கும் ‘பாஷ்’ நிறுவனம், இந்திய சந்தையில் கால் பதித்து 100 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து, இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
‘சுசூகி’ உடன் ஒப்பந்தம்
ஐ.ஐ.டி., ஹைதராபாத், அதன் வளாகத்தில், ‘சுசூகி மேம்பாட்டு மையம்’ ஒன்றை அமைக்க, ‘சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன்’ உடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்காக, வாகன துறையில் புதுமைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
‘பேங்க் ஆப் இந்தியா’
‘பேங்க் ஆப் இந்தியா’வின் நிகர லாபம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 90 சதவீதம் அதிகரித்து, 1,027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில், இந்நிறுவனம் 541 கோடி ரூபாய் அளவுக்கே நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)