பதிவு செய்த நாள்
04 பிப்2022
21:17
‘ஜியோ பிளாட்பார்ம்’ முதலீடு
முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ஜியோ பிளாட்பார்ம்’ நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘டூ பிளாட்பார்ம்ஸ்’ எனும் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை, 112 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளது.சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள இந்நிறுவனம், பிரணவ் மிஸ்திரி என்பவரால் துவங்கப்பட்டதாகும்.
பங்கு விலை அறிவிப்பு
‘அதானி வில்மார்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் பங்கின் விலை, 218 – 230 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,600 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
நுாறாண்டு கடந்த ‘பாஷ்’
தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்கும் ‘பாஷ்’ நிறுவனம், இந்திய சந்தையில் கால் பதித்து 100 ஆண்டுகள் நிறைவுற்றதை அடுத்து, இந்தியாவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
‘சுசூகி’ உடன் ஒப்பந்தம்
ஐ.ஐ.டி., ஹைதராபாத், அதன் வளாகத்தில், ‘சுசூகி மேம்பாட்டு மையம்’ ஒன்றை அமைக்க, ‘சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன்’ உடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கான இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்காக, வாகன துறையில் புதுமைகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
‘பேங்க் ஆப் இந்தியா’
‘பேங்க் ஆப் இந்தியா’வின் நிகர லாபம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 90 சதவீதம் அதிகரித்து, 1,027 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில், இந்நிறுவனம் 541 கோடி ரூபாய் அளவுக்கே நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|