பதிவு செய்த நாள்
05 பிப்2022
21:55
மும்பை:அங்கீகரிக்கப்படாத மின்னணு வர்த்தக தளங்களில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை மேற்கொள்ளவோ அல்லது அத்தகைய பரிவர்த்தனைகளில் பணத்தை செலுத்தவோ வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி பொதுமக்களை எச்சரித்துள்ளது.
மேலும், இத்தகைய அங்கீகரிக்கப்படாத மின்னணு வர்த்தக தளங்களில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்திய முதலீட்டாளர்களை குறிவைத்து, சமூக வலைதளங்கள், இணைய பக்கங்கள், ஓ.டி.டி., கேமிங் செயலி கள் போன்றவற்றில் இந்த அங்கீகரிக்கப்படாத வர்த்தக தளங்கள் விளம்பரங்களை வெளியிடுகின்றன என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்ட அன்னிய செலாவணி பரிவர்த்தனைகளை, மின்னணு முறையில் செயல்படுத்த முடியும் என்றாலும், அவை, ரிசர்வ் வங்கி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளின் வர்த்தக தளங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|