பதிவு செய்த நாள்
08 பிப்2022
21:35
புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கும் நிலையில், பாலிசிதாரர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையிலான ஒரு செய்தி, உலா வருகிறது.
புதிய பங்கு வெளியீட்டின்போது, எல்.ஐ.சி.,யின் பாலிசிதாரர்களுக்கு, பங்கின் விலையில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்கின்றனர்.இதுகுறித்து, இத்துறை சார்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:எல்.ஐ.சி., நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதை முன்னிட்டு, அதன் பாலிசிதாரர்களுக்கு 5 சதவீததள்ளுபடி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
பாலிசிதாரர்களுக்கு மட்டுமின்றி, நிறுவன ஊழியர்களுக்கும் பங்கின் விலையில் தள்ளுபடி வழங்க வாய்ப்பிருக்கிறது. அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இம்மாதம் 10ம் தேதி வாக்கில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப் பாட்டு அமைப்பான ‘செபி’க்கு எல்.ஐ.சி., விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அண்மையில் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்த பாண்டே, இவ்வாரத்தில் செபிக்கு விண்ணப்பிக்கப்படும் என்றும்; மார்ச் 31ம் தேதிக்குள் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது நினைவுகூரத் தக்கது./
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|