எல்.ஐ.சி., பங்கு வெளியீடு பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி எல்.ஐ.சி., பங்கு வெளியீடு பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி ...  ரிசர்வ் வங்கி கூட்டத்தில் நிதியமைச்சர் உரையாற்றுகிறார் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் நிதியமைச்சர் உரையாற்றுகிறார் ...
இனி வார சம்பளம் தான் ‘இந்தியாமார்ட்’ அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2022
21:39

புதுடில்லி:பெரு நிறுவனங்களில் முதல் முறையாக, வாராந்திர ஊதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது, ‘இந்தியாமார்ட்’ நிறுவனம்.

மின்னணு வர்த்தக நிறுவனமான இந்தியாமார்ட், அதன் ஊழியர்களுக்கு, வாராந்திர ஊதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து இந்தியாமார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தினேஷ் அகர்வால் டுவிட்டரில் தெரிவித்து உள்ளதாவது:
வசதியான பணி கலாசாரத்தை உருவாக்கி, ஊழியர்களின் நிதி வளத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன், வாராந்திர சம்பளத்தை வழங்கும் முதல் இந்திய நிறுவனமாக, இந்தியா மார்ட் உருவெடுத்துள்ளது. மாறிவரும் பணி கலாசாரம் மற்றும் ஊழியர்களின் நிதித் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம், இந்த நடவடிக்கை அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதாக இருக்கும். அத்துடன் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற ஊக்கமளிப்பதாகவும் இம்மாற்றம் இருக்கும்.
ஊழியர்களுக்கு வாரந்திர சம்பளம் வழங்குவது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிறுவனம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் முதலாக இம்முறையை அறிமுகம் செய்வதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்தாலும், சம்பளம் வழங்குவதற்கான வழிமுறை என்ன என்பது போன்ற தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்நிறுவனத்தில் மொத்தம் 2,724 நிரந்தர ஊழியர்களும், 836 தற்காலிக ஊழியர்களும் உள்ளனர்.இத்தகைய வாராந்திர ஊதிய திட்டம் ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது.இந்தியாவில் பெரு நிறுவனம் ஒன்று, இத்தகைய நடைமுறையை மேற்கொள்வது இதுவே முதன் முறை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)