பதிவு செய்த நாள்
08 பிப்2022
21:39
புதுடில்லி:பெரு நிறுவனங்களில் முதல் முறையாக, வாராந்திர ஊதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது, ‘இந்தியாமார்ட்’ நிறுவனம்.
மின்னணு வர்த்தக நிறுவனமான இந்தியாமார்ட், அதன் ஊழியர்களுக்கு, வாராந்திர ஊதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து இந்தியாமார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தினேஷ் அகர்வால் டுவிட்டரில் தெரிவித்து உள்ளதாவது:
வசதியான பணி கலாசாரத்தை உருவாக்கி, ஊழியர்களின் நிதி வளத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன், வாராந்திர சம்பளத்தை வழங்கும் முதல் இந்திய நிறுவனமாக, இந்தியா மார்ட் உருவெடுத்துள்ளது. மாறிவரும் பணி கலாசாரம் மற்றும் ஊழியர்களின் நிதித் தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம், இந்த நடவடிக்கை அவர்களின் நிதிச் சுமையைக் குறைப்பதாக இருக்கும். அத்துடன் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற ஊக்கமளிப்பதாகவும் இம்மாற்றம் இருக்கும்.
ஊழியர்களுக்கு வாரந்திர சம்பளம் வழங்குவது குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிறுவனம் யோசிக்க ஆரம்பித்துவிட்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் முதலாக இம்முறையை அறிமுகம் செய்வதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்தாலும், சம்பளம் வழங்குவதற்கான வழிமுறை என்ன என்பது போன்ற தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
இந்நிறுவனத்தில் மொத்தம் 2,724 நிரந்தர ஊழியர்களும், 836 தற்காலிக ஊழியர்களும் உள்ளனர்.இத்தகைய வாராந்திர ஊதிய திட்டம் ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாங்காங், அமெரிக்கா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது.இந்தியாவில் பெரு நிறுவனம் ஒன்று, இத்தகைய நடைமுறையை மேற்கொள்வது இதுவே முதன் முறை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|