பதிவு செய்த நாள்
09 பிப்2022
22:21
புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்மாதம் 14ம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
அன்றைய தினம், ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழுவினர் பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். இதில் நிதியமைச்சர் பங்கேற்று உரையாற்றுகிறார். இக் கூட்டத்தில் 2022 – -23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய விஷயங்கள், நிதி ஒருங்கிணைப்பு திட்டம் மற்றும் மூலதன செலவுகள் உள்ளிட்டவை குறித்தும் அவர் பேச உள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர்கள் அடங்கிய நிர்வாக குழுவில் நிதியமைச்சர் உரையாற்றுவது என்பது, வழக்கமான நடைமுறையாகும்.வரும் திங்களன்று நடைபெறும் இக்கூட்டத்தில், பொருளாதாரத்தின் வளர்ச்சி சம்பந்தமான பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து அவர் விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொற்று நோயின் மூன்று அலைகளை மீறி பொருளாதாரம் மீட்சி கண்டு வரும் நிலையில், அவரது இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|