பதிவு செய்த நாள்
09 பிப்2022
22:24
புதுடில்லி:‘வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பின், சில வருவாய் இனங்களை சேர்க்க தவறியோருக்கு, ஒரு முறை மட்டுமே கணக்கை திருத்தி தாக்கல் செய்யும் சலுகை வழங்கப்படும்’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 – 23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு சலுகையை அறிவித்தார்.
அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பின், அதில் சில வருவாய் இனங்களை சேர்க்கத் தவறியோர், இரண்டு ஆண்டுகளுக்குள் விடுபட்ட வருவாயை சேர்த்து, திருத்திய வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.
இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், டில்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில், மத்திய நேரடி வரிகள் துறை தலைவர் ஜே.பி.மல்ஹோத்ரா பேசியதாவது:
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை 2 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யும் நடைமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.ஆனால், ஒரு முறை மட்டுமே வருமான வரி கணக்கை திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய முடியும். இந்த சலுகையை, ஒருவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த இரு ஆண்டுகளுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|