பதிவு செய்த நாள்
09 பிப்2022
22:27
புதுடில்லி:‘வேதாந்தா’ குழுமம், அதன் நிறுவன கட்டமைப்புகளில் எந்தவிதமான மறுசீரமைப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை என்றும்; தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
வேதாந்தா குழுமம், அதன் நிறுவனங்களை மறுசீரமைக்கும் முயற்சியில் அண்மையில் இறங்கியது. கடந்த ஆண்டு நவம்பரில், நிர்வாக குழு, நிறுவனத்தை மறுசீரமைப்பது குறித்த ஆய்வில் இறங்குவது என முடிவெடுத்து அறிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது, நிறுவன கட்டமைப்புகளில் எந்தவிதமான மாற்றத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும்; தற்போது இருக்கும் நிலையே தொடர்வது என்றும் முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
நிர்வாக குழுவினர், முக்கியமான பல கொள்கை சம்பந்தமான விஷயங்கள் குறித்து விவாதித்து முடிவுகளை எடுத்துள்ளனர் என வேதாந்தா தெரிவித்துள்ளது.மேலும், நிறுவன கட்டமைப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வது குறித்து, ஆலோசகர்கள், நிபுணர்கள் ஆகியோருடைய கருத்துகளும் அறியப்பட்டு, அதன் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை, தற்போதைய வணிகங்களுக்கு அவை ஏற்றவையாக இருந்தால் மட்டுமே, அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் வேதாந்தா தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|