நிறுவன மறுசீரமைப்பு: கைவிட்டது ‘வேதாந்தா’ நிறுவன மறுசீரமைப்பு: கைவிட்டது ‘வேதாந்தா’ ...  பியூச்சர் குழுமத்திற்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’ பியூச்சர் குழுமத்திற்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஐ.சி.ஐ.சி.ஐ., ‘இன்ஸ்டாபிஸ்’ செயலி இதர வாடிக்கையாளருக்கும் பயன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 பிப்
2022
22:33

சென்னை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளராக இல்லாத வணிகர்களும், ‘இன்ஸ்டாபிஸ்’ செயலியை பயன்படுத்தி, இதர வங்கிகளுக்கிடையே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில், அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் இன்ஸ்டாபிஸ் செயலி, வர்த்தகர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றாகும். இதன் வாயிலாக, இவ்வங்கியின் நடப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் மட்டும் பயன் பெற்று வந்தனர். தற்போது இதர வங்கி வாடிக்கையாளர்களும், இச்செயலியின் வாயிலாக பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில், இந்த செயலியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கணக்கு இல்லாத எந்த ஒரு வணிகரும், இன்ஸ்டாபிஸ் வாயிலாக அவர்களது வங்கி கணக்கை இணைத்து, பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.குறிப்பாக மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட், ஹோட்டல்கள், மருந்தகங்கள் உட்பட பல்வேறு தொழில் புரிவோர் இதனால் பயனடைய முடியும்.
யு.பி.ஐ., – ஐ.டி., மற்றும் க்யூ.ஆர்., கோடு வாயிலாக, தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியும். ‘ஆன்லைன்’ வாயிலாக, கே.ஒய்.சி., எனும், ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ நடைமுறையை தாக்கல் செய்து, இந்த சேவையை பெற முடியும். இந்த செயலி வாயிலாக, பி.ஓ.எஸ்., எனும் கார்டு தேய்க்கும் சாதனத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)