பதிவு செய்த நாள்
09 பிப்2022
22:33
சென்னை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளராக இல்லாத வணிகர்களும், ‘இன்ஸ்டாபிஸ்’ செயலியை பயன்படுத்தி, இதர வங்கிகளுக்கிடையே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில், அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் இன்ஸ்டாபிஸ் செயலி, வர்த்தகர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒன்றாகும். இதன் வாயிலாக, இவ்வங்கியின் நடப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் மட்டும் பயன் பெற்று வந்தனர். தற்போது இதர வங்கி வாடிக்கையாளர்களும், இச்செயலியின் வாயிலாக பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் வகையில், இந்த செயலியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கணக்கு இல்லாத எந்த ஒரு வணிகரும், இன்ஸ்டாபிஸ் வாயிலாக அவர்களது வங்கி கணக்கை இணைத்து, பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.குறிப்பாக மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட், ஹோட்டல்கள், மருந்தகங்கள் உட்பட பல்வேறு தொழில் புரிவோர் இதனால் பயனடைய முடியும்.
யு.பி.ஐ., – ஐ.டி., மற்றும் க்யூ.ஆர்., கோடு வாயிலாக, தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியும். ‘ஆன்லைன்’ வாயிலாக, கே.ஒய்.சி., எனும், ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்’ நடைமுறையை தாக்கல் செய்து, இந்த சேவையை பெற முடியும். இந்த செயலி வாயிலாக, பி.ஓ.எஸ்., எனும் கார்டு தேய்க்கும் சாதனத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|