பியூச்சர் குழுமத்திற்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’ பியூச்சர் குழுமத்திற்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’ ...  சில்லரை முதலீட்டாளர்கள்  பங்களிப்பு அதிகரிப்பு சில்லரை முதலீட்டாளர்கள் பங்களிப்பு அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டியில் மாற்றம் இல்லை: ‘ரிசர்வ் வங்கி’ அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2022
20:59

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, அதன் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ‘ரெப்போ’ வட்டியில் எந்த மாறுதலும் செய்யப்பட வில்லை என அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான, ஆறு உறுப்பினர்களை கொண்ட பணக் கொள்கை குழுவின் கூட்டம், கடந்த 8ம் தேதியன்று துவங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. பட்ஜெட்டுக்கு பின், முதன் முறையாக கூடிய இந்த கூட்டத்தின் முடிவில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து, ரெப்போ வட்டிவிகிதம் 4 சதவீதமாக தொடர்கிறது. முக்கிய அம்சங்கள்:
* ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும்
* தொடர்ந்து 10வது முறையாக, ரெப்போ வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
* வங்கிகளின் டெபாசிட்களுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும், ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதம் 3.35 சதவீதமாக தொடரும்
* நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 9.2 சதவீதமாகவும்; அடுத்த நிதியாண்டில் 7.8 சதவீதமாகவும் இருக்கும்
* நடப்பு நிதியாண்டில் சில்லரை விலை பணவீக்கம் 5.3 சதவீதமாகவும்; அடுத்த நிதியாண்டில் 4.5 சதவீதமாகவும் இருக்கும்
* தற்போதைய நடப்பு கணக்கு பற்றாக்குறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 2 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்
* கொரோனா தொடர்பான சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்பு சேவைகளுக்கான, 50 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு கடன் திட்டம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்
* ‘இ – ருபீ’ டிஜிட்டல் வவுச்சருக்கான வரம்பு, 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இ – ருபீ வசதி வாயிலாக, இணைய வழியில் முன்கூட்டியே பணம் செலுத்தி, ரசீதுகளை வாங்கிக் கொள்ளலாம்.
பின், பணம் செலுத்த வேண்டிய இடத்தில், ரசீது தொடர்பான விபரங்களை மட்டும் வழங்கினால் போதும்; பணம் பெறப்பட்டு விடும் இந்த ரசீதை பிறருக்கு பரிசாகவும் வழங்க முடியும். இப்போது வவுச்சருக்கான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
* அடுத்த பணக்கொள்கை குழு கூட்டம், ஏப்ரல் 6 – 8ம் தேதி வரை நடைபெறும்.‘ட்யூலிப் மேனியா'ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம் முடிவடைந்த பின், கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘கிரிப்டோகரன்சி’ குறித்து பேசும்போது, வரலாற்று சம்பவம் ஒன்றை தொடர்புபடுத்தி பேசினார்.
‘கிரிப்டோகரன்சியின் மதிப்புக்கு எந்த அடிப்படையும் இல்லை; ஒரு ட்யூலிப் மலர் அளவுகூட இல்லை’ என கூறினார்.நீர்க் குமிழி போன்று ஆகிப்போன, நிதி குமிழிக்கு, ‘ட்யூலிப் மேனியா’வை நிபுணர்கள் உதாரணமாக காட்டுவர்.
17ம் நுாற்றாண்டில், டச்சு முதலீட்டாளர்கள், ட்யூலிப் மலர்களை வாங்க துவங்கினர். இதையடுத்து, அவற்றின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. ஒரு பூவின் சராசரி விலை, ஒரு திறமையான தொழிலாளியின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில், ஒரு வீட்டின் விலையை விட அதிகமாக இருந்தது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)