பதிவு செய்த நாள்
10 பிப்2022
21:04
மும்பை:தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், சில்லரை முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குகள், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது குறித்து, ‘பிரைம்இன்போபேஸ் டாட் காம்’ நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளதாவது:டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில், சில்லரை முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் பங்குகள், 7.32 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்களிடம் உள்ள பங்குகளின் மதிப்பு 18.98 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், 2லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கும் அதிக மதிப்பு கொண்ட தனி நபர்களின் முதலீடும், இதுவரை இல்லாத அளவுக்கு மதிப்பீட்டு காலத்தில் அதிகரித்துள்ளது. சில்லரை முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்திருந்த போதிலும், நிறுவன முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் பங்குகள் மதிப்பு சரிவை கண்டுஉள்ளது. இதற்கு அன்னிய முதலீட்டாளர்கள், இக்காலகட்டத்தில் கிட்டத்தட்ட 38 ஆயிரத்து 521 கோடி ரூபாயை வெளியே எடுத்தது காரணமாக அமைந்தது.
இதையடுத்து, நிறுவன முதலீட்டாளர்கள் வசம் இருக்கும் பங்குகள், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், 20.74 சதவீதமாககுறைந்துள்ளது.எல்.ஐ.சி., நிறுவனத்தின் வசம் இருக்கும் பங்குகளின் மதிப்பு 9.53 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|