வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ‘டாடா சன்ஸ்’ தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமனம் ‘டாடா சன்ஸ்’ தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமனம் ...
எல்.ஐ.சி., பங்கு வெளியீடு ஐ.ஆர்.டி.ஏ., அனுமதி வழங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2022
21:29

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 9ம் தேதியன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், இந்த அனுமதியை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வழங்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு இன்று விண்ணப்பிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்த பாண்டே, எல்.ஐ.சி., இன்னும் சில நாட்களில் செபிக்கு விண்ணப்பிக்கும் என்றும்; மார்ச் 31ம் தேதிக்குள் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துஇருந்தார்.
இதற்கிடையே, எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பாலிசிதாரர்களுக்கு மட்டுமின்றி, நிறுவன ஊழியர்களுக்கும், பங்கின் விலையில் தள்ளுபடி வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எல்.ஐ.சி, நிறுவனம், 64 ஆயிரத்து 722 கோடி ரூபாய் மதிப்புடன், உலகளவில் மூன்றாவது வலுவான இன்சூரன்ஸ் பிராண்டாக இருப்பதாக, லண்டனை சேர்ந்த ‘பிராண்டு பைனான்ஸ்’ நிறுவன அறிக்கை அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)