பதிவு செய்த நாள்
10 பிப்2022
21:29
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 9ம் தேதியன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், இந்த அனுமதியை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., வழங்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து, எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு இன்று விண்ணப்பிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை செயலர் துஹின் காந்த பாண்டே, எல்.ஐ.சி., இன்னும் சில நாட்களில் செபிக்கு விண்ணப்பிக்கும் என்றும்; மார்ச் 31ம் தேதிக்குள் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்துஇருந்தார்.
இதற்கிடையே, எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 5 சதவீத தள்ளுபடி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. பாலிசிதாரர்களுக்கு மட்டுமின்றி, நிறுவன ஊழியர்களுக்கும், பங்கின் விலையில் தள்ளுபடி வழங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எல்.ஐ.சி, நிறுவனம், 64 ஆயிரத்து 722 கோடி ரூபாய் மதிப்புடன், உலகளவில் மூன்றாவது வலுவான இன்சூரன்ஸ் பிராண்டாக இருப்பதாக, லண்டனை சேர்ந்த ‘பிராண்டு பைனான்ஸ்’ நிறுவன அறிக்கை அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|