பதிவு செய்த நாள்
13 பிப்2022
19:30
மியூச்சுவல் பண்ட் துறையில், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யும் கணக்குகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் ஐந்து கோடியாக உயர்ந்திருக்கிறது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள தகவல் படி, ஜனவரி மாதத்தில் 26 லட்சம் புதிய எஸ்.ஐ.பி.,கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் துவக்கப்பட்ட மாதாந்திர சராசரியான 24 லட்சம் கணக்குகளை விட இது அதிகமாகும்.பங்குச்சந்தையின் போக்கு காரணமாக சம பங்கும் நிதிகளில் முதலீடு குறைந்தாலும், எஸ்.ஐ.பி., கணக்குகள் அதிகரித்துள்ளன.
ஏற்ற இறக்கமான சந்தையில் எஸ்.ஐ.பி., வழியிலான முதலீட்டின் தேவையை முதலீட்டாளர்கள் உணர்ந்திருப்பதன் அறிகுறியாக இது கருதப்படுகிறது.சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மன்ட் பிளான் எனப்படும் எஸ்.ஐ.பி., முறை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் சீரான முதலீட்டை மேற்கொள்ள வழி செய்கிறது.
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பலரும் தயாராகி வருவதும், ஜனவரி முதல் மார்ச் மாத காலம் வரையிலான எஸ்.ஐ.பி., கணக்கு துவக்கத்தில் தாக்கம் செலுத்துவதாக கருதப்படுகிறது.ஜனவரி மாதம் எஸ்.ஐ.பி., கணக்கு வாயிலான முதலீடு, 11,516 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய மாதத்தைவிட இது இரண்டு சதவீதம் அதிகமாகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|