பதிவு செய்த நாள்
15 பிப்2022
10:18
புதுடில்லி : ‘சிட்டி’ குழுமத்தின் இந்திய சில்லரை வணிகத்தை வாங்குவதற்கான முயற்சியில், ஆக்சிஸ் வங்கி தீவிரமாக இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.கிட்டத்தட்ட 18 ஆயிரத்து, 750 கோடி ரூபாய் மதிப்பில், இந்த வணிகத்தை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து, வங்கி துறையை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கிடைத்த பிறகு, இன்னும் சில வாரங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம்.தற்போது சிட்டி குழுமத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நலனும் கருத்தில் கொள்ளப்பட்டு, ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.சிட்டி குழுமத்தின் வணிகத்தை முழுமையாக இணைக்க, ஆக்சிஸ் வங்கிக்கு ஆறு மாத காலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிட்டி குழுமம், அதன் சில்லரை வங்கி வணிகத்திலிருந்து, இந்தியா உள்ளிட்ட, கிட்டத்தட்ட 13 நாடுகளிலிருந்து வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. சொத்து மேலாண்மை உள்ளிட்ட சேவைகளில் அதிக கவனம் செலுத்தவும், இந்த குழுமம் முடிவு செய்துள்ளது.இதனையடுத்தே, ஆக்சிஸ் வங்கி இந்த வணிகத்தை வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|