பதிவு செய்த நாள்
15 பிப்2022
10:24
மும்பை : நேற்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவைக் கண்டன. ரஷ்யா – உக்ரைன் பதற்ற நிலை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 1,700 புள்ளிகள் சரிவைக் கண்டது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ வர்த்தகத்தின் இடையே, 17 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே இறங்கியது.சென்செக்ஸ் பிரிவில் இடம்பெற்றிருக்கும் 30 நிறுவனங்களில், டி.சி.எஸ்., நிறுவன பங்குகள் தவிர, மீதி அனைத்து பங்குகளும் சரிவைக் கண்டன.டாடா ஸ்டீல், எச்.டி.எப்.சி., மற்றும் எஸ்.பி.ஐ., ஆகியவை, 4 சதவீதத்துக்கும் அதிகமான இழப்பை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமின்றி; ஆசிய சந்தைகளும் நேற்று சரிவை சந்தித்தன. இதனால் உலகளவில் முதலீட்டாளர்கள் மிகப் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாயிற்று.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|