பதிவு செய்த நாள்
15 பிப்2022
10:29
புதுடில்லி : ‘ரிலையன்ஸ்’ குழுமத்தின் துணை நிறுவனமான, ‘ஜியோ பிளாட்பார்ம்ஸ்’ செயற்கைக்கோள் அடிப்படையிலான பிராட்பேண்டு சேவைகளை இந்தியாவில் வழங்க, லக்ஸம்பர்க்கை சேர்ந்த எஸ்.இ.எஸ்., நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துஉள்ளது.
இந்த முயற்சி குறித்து, இரு நிறுவனங்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், இரு நிறுவனங்களும் இணைந்து, கூட்டாக, ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நிறுவனத்தில், ஜியோ வசம் 51 சதவீத பங்குகளும்; எஸ்.இ.எஸ்., வசம் 49 சதவீத பங்குகளும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படு உள்ளது.
இது குறித்து, ஜியோ நிறுவனத்தின் இயக்குனர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது:
‘பைபர்’ அடிப்படையிலான சேவைகள் மற்றும் ‘5ஜி’ ஆகியவற்றை தொடர்ந்து, அடுத்து, இந்த புதிய சேவையையும் வழங்க இருக்கிறோம். எஸ்.இ.எஸ்., உடனான கூட்டு முயற்சியின் வாயிலாக, பிராட்பேண்டு சேவை மேலும் வளர்ச்சியுறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|