வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை ...
நுண்கடன் துறையில் தமிழகம் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2022
07:11

மும்பை : நுண்கடன் துறையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சிறு தொழில் வளர்ச்சி வங்கியான, சிட்பி, ஈக்யுபேக்ஸ் இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திய நுண்கடன் துறை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நடப்பு 2021 – 22ம் நிதியாண்டின் ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டு நிலவரப்படி நுண்கடன் துறை வழங்கிய மொத்த கடன், 2 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, 2020 – 21ம் நிதியாண்டின் இதே காலத்தில், 2 லட்சத்து 22 ஆயிரத்து 60 கோடி ரூபாயாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நுண்கடன் துறை வழங்கிய கடன், கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 96 சதவீதம் உயர்ந்து, 66 ஆயிரத்து 681 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில் கடன் வாங்கியோர் எண்ணிக்கை, 94 சதவீதம் உயர்ந்துள்ளது.இதே காலத்தில், 90 நாட்களுக்கு மேற்பட்ட கடன் தவணை நிலுவை, 3.01 சதவீதத்தில் இருந்து, 2.95 சதவீதமாக குறைந்து உள்ளது.

மதிப்பீட்டு காலத்தில், அதிக அளவில் நுண்கடன்களை வழங்கியதில், தமிழகம், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இதில், தமிழகம், 29 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நுண்கடன் வழங்கி முதலிடத்தை பிடித்துள்ளது.

நுண்கடன் துறைக்கு வங்கிகள், 92 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் – நுண்கடன் நிறுவனங்கள் ஆகியவை, 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிக அளவில் நுண்கடன்களை பெறுகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)