பதிவு செய்த நாள்
16 பிப்2022
07:11
மும்பை : நுண்கடன் துறையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
சிறு தொழில் வளர்ச்சி வங்கியான, சிட்பி, ஈக்யுபேக்ஸ் இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து இந்திய நுண்கடன் துறை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளன.அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நடப்பு 2021 – 22ம் நிதியாண்டின் ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டு நிலவரப்படி நுண்கடன் துறை வழங்கிய மொத்த கடன், 2 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, 2020 – 21ம் நிதியாண்டின் இதே காலத்தில், 2 லட்சத்து 22 ஆயிரத்து 60 கோடி ரூபாயாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நுண்கடன் துறை வழங்கிய கடன், கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 96 சதவீதம் உயர்ந்து, 66 ஆயிரத்து 681 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே காலத்தில் கடன் வாங்கியோர் எண்ணிக்கை, 94 சதவீதம் உயர்ந்துள்ளது.இதே காலத்தில், 90 நாட்களுக்கு மேற்பட்ட கடன் தவணை நிலுவை, 3.01 சதவீதத்தில் இருந்து, 2.95 சதவீதமாக குறைந்து உள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், அதிக அளவில் நுண்கடன்களை வழங்கியதில், தமிழகம், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன. இதில், தமிழகம், 29 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நுண்கடன் வழங்கி முதலிடத்தை பிடித்துள்ளது.
நுண்கடன் துறைக்கு வங்கிகள், 92 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. வங்கி சாரா நிதி நிறுவனங்கள் – நுண்கடன் நிறுவனங்கள் ஆகியவை, 80 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுக்கள் அதிக அளவில் நுண்கடன்களை பெறுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|