பதிவு செய்த நாள்
16 பிப்2022
07:14
மும்பை : துபாயில் நடந்து வரும் ‘எக்ஸ்போ 2000’ கண்காட்சியில், இந்திய அரங்கின் வருகையாளர் எண்ணிக்கை, 10 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சைச் சேர்ந்த துபாயில், ‘எக்ஸ்போ 2000’ கண்காட்சி, 2021 அக்., 1ல் துவக்கப்பட்டது; அன்று இந்திய அரங்கை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்.இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களில் துபாய் எக்ஸ்போ கண்காட்சியில், இந்திய அரங்கிற்கு வருகை தந்தோர் எண்ணிக்கை, 10 லட்சத்தை தாண்டிஉள்ளது.
இது குறித்து பியுஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:துபாய் எக்ஸ்போவில் இந்திய அரங்கிற்கு வருகை தந்தோர் எண்ணிக்கை புதிய மைல்கல்லை எட்டிஉள்ளது. நமது கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்ற, 10 லட்சம் இதயங்கள் ஆர்ப்பரித்து அரங்கிற்கு வந்துள்ளன. இது, புதிய இந்தியாவின் பயணம், உலகை கவர்ந்துள்ளதை குறிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
துபாய் எக்ஸ்போவின் இந்திய அரங்கில் பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் பன்முக கலாசார சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.இந்திய அரங்கில் தற்போது ‘ஆந்திரா வாரம்’ கொண்டாடப்படுகிறது. அடுத்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் வாரங்கள் கொண்டாடப்பட உள்ளன. துபாய் எக்ஸ்போ மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|