பதிவு செய்த நாள்
16 பிப்2022
07:14
புதுடில்லி : மெக்லாட்ஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.
மெக்லாட்ஸ் பார்மா நிறுவனம், ‘ஜெனரிக்’ எனப்படும் மூல மருந்துகளை உருவாக்கி, தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் இதய நோய், நீரிழிவு, சரும நோய் உள்ளிட்டவற்றுக்கான மருந்துகளை தயாரித்து, 170 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில், இந்நிறுவனத்திற்கு, 4,900 விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, மெக்லாட்ஸ் பார்மா, 5 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆவணங்கள், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் வழங்கப்பட்டுள்ளன. செபி அனுமதி அளித்ததும், பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படும். நிறுவனர்கள் வசம் உள்ள 6 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.இந்நிறுவன ஊழியர்களுக்கு பங்கு வெளியீட்டு விலையில் சலுகை வழங்கப்படும் என, மெக்லாட்ஸ் பார்மா தெரிவித்து உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|