பதிவு செய்த நாள்
16 பிப்2022
07:16
புதுடில்லி : இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரிவிலக்கு வர்த்தக ஒப்பந்தம்,வரும் 18ம் தேதி கையொப்பமாக உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ‘சி.இ.பி.ஏ.,’ எனும் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் குறித்த பேச்சு துவங்கியது.
இந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு சலுகைகள் வழங்கப்படும். மேலும், சேவைகள் துறையில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் விதிமுறைகளை தளர்த்த இந்த ஒப்பந்தம் வகை செய்யும். இதனால் இரு நாடுகளும் பயன்பெறும். இந்தவகையில், இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ‘சி.இ.பி.ஏ.,’ ஒப்பந்தம்,வரும் 18ம் தேதி கையொப்பமாக உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மொரீஷியசை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். அங்கு, ஜவுளி, நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள், தோல், காலணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது.
பரஸ்பர வர்த்தகம்
கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், மேற்காசியாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இந்தியா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 3 லட்சத்து 34 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக இருந்தது. ஏற்றுமதி, 1 லட்சத்து 25 ஆயிரத்து 250 கோடி ரூபாய்; இறக்குமதி. 2 லட்சத்து 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|