துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை துபாய் ‘எக்ஸ்போ 2000’ இந்திய அரங்கு சாதனை ...  ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு ...
இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வரி விலக்கு வர்த்தக ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2022
07:16

புதுடில்லி : இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வரிவிலக்கு வர்த்தக ஒப்பந்தம்,வரும் 18ம் தேதி கையொப்பமாக உள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ‘சி.இ.பி.ஏ.,’ எனும் ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் குறித்த பேச்சு துவங்கியது.

இந்த ஒப்பந்தப்படி, இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு சலுகைகள் வழங்கப்படும். மேலும், சேவைகள் துறையில் வர்த்தகத்தை மேம்படுத்தவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் விதிமுறைகளை தளர்த்த இந்த ஒப்பந்தம் வகை செய்யும். இதனால் இரு நாடுகளும் பயன்பெறும். இந்தவகையில், இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ‘சி.இ.பி.ஏ.,’ ஒப்பந்தம்,வரும் 18ம் தேதி கையொப்பமாக உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மொரீஷியசை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் ஏராளமான இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். அங்கு, ஜவுளி, நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள், தோல், காலணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு மிகப் பெரிய சந்தை உள்ளது.

பரஸ்பர வர்த்தகம்

கடந்த, 2020 – 21ம் நிதியாண்டில், மேற்காசியாவைச் சேர்ந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – இந்தியா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 3 லட்சத்து 34 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக இருந்தது. ஏற்றுமதி, 1 லட்சத்து 25 ஆயிரத்து 250 கோடி ரூபாய்; இறக்குமதி. 2 லட்சத்து 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)