ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி ரூ.2.58 லட்சம் கோடியாக உயர்வு ... மலைக்க வைக்கும் எல்.ஐ.சி.,யின் உரிமை கோரப்படாத தொகை மலைக்க வைக்கும் எல்.ஐ.சி.,யின் உரிமை கோரப்படாத தொகை ...
இந்தியா வேகமாக வளர்ச்சியடையும் நிதியமைச்சக பொருளாதார அறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2022
21:34

புதுடில்லி:உலகின் மிகப்பெரிய நாடுகளுக்கு மத்தியில், மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என, மத்திய நிதியமைச்சகத்தின், மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு, 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எடுத்திருக்கும் பல்வேறு முயற்சிகளால், உலகின் மிகப்பெரிய நாடுகளுக்கு மத்தியில், இந்தியா வேகமான வளர்ச்சியை எட்டும்.தொற்று நோய் பாதிப்புக்கு பின், நடப்பு நிதியாண்டு, பொருளாதார மீட்சியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கலாம்.
இந்த மீட்சிக்கு, உற்பத்தி துறை மற்றும் கட்டுமான துறை வளர்ச்சி முக்கிய காரணமாக அமையும். உள்கட்டமைப்பில் அறிமுகம் செய்யப்பட்ட, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் காரணமாக, இந்த துறைகள் வளர்ச்சியை எட்டுகின்றன.
மேலும், விவசாயத்தை பொறுத்தவரை, நிகர விதைப்பு பரப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பொருட்கள் இருப்பும் அதிகரிக்கும்.அத்துடன், குறைந்தபட்ச ஆதரவு விலையில் தாராளமாக கொள்முதல் செய்து, ‘பிரதம மந்திரி கிஸான்’ திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கிறது.
இத்தகைய காரணங்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2020 – 21ம் நிதியாண்டில், மைனஸ் 6.6 சதவீதமாக இருந்தது; 2022 – 23ம் நிதியாண்டில், மிக வேகமான வளர்ச்சியை எட்டும்.தொற்று நோய் காரணமான கவலையும், நிச்சயமற்ற நிலையும் மக்கள் மனதிலிருந்து நீங்கும்பட்சத்தில், நுகர்வு அதிகரிக்க துவங்கும்.
இதையடுத்து தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்கும்.புவிசார் அரசியல் உள்ளிட்ட வேறு புற பாதிப்புகள் ஏற்படாதபட்சத்தில், இந்திய பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் ஏற்றம் பெறும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)