பதிவு செய்த நாள்
16 பிப்2022
21:34
புதுடில்லி:உலகின் மிகப்பெரிய நாடுகளுக்கு மத்தியில், மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என, மத்திய நிதியமைச்சகத்தின், மாதாந்திர பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:மத்திய அரசு, 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் எடுத்திருக்கும் பல்வேறு முயற்சிகளால், உலகின் மிகப்பெரிய நாடுகளுக்கு மத்தியில், இந்தியா வேகமான வளர்ச்சியை எட்டும்.தொற்று நோய் பாதிப்புக்கு பின், நடப்பு நிதியாண்டு, பொருளாதார மீட்சியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கலாம்.
இந்த மீட்சிக்கு, உற்பத்தி துறை மற்றும் கட்டுமான துறை வளர்ச்சி முக்கிய காரணமாக அமையும். உள்கட்டமைப்பில் அறிமுகம் செய்யப்பட்ட, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் காரணமாக, இந்த துறைகள் வளர்ச்சியை எட்டுகின்றன.
மேலும், விவசாயத்தை பொறுத்தவரை, நிகர விதைப்பு பரப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் உணவு பொருட்கள் இருப்பும் அதிகரிக்கும்.அத்துடன், குறைந்தபட்ச ஆதரவு விலையில் தாராளமாக கொள்முதல் செய்து, ‘பிரதம மந்திரி கிஸான்’ திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளின் வருவாயும் அதிகரிக்கிறது.
இத்தகைய காரணங்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2020 – 21ம் நிதியாண்டில், மைனஸ் 6.6 சதவீதமாக இருந்தது; 2022 – 23ம் நிதியாண்டில், மிக வேகமான வளர்ச்சியை எட்டும்.தொற்று நோய் காரணமான கவலையும், நிச்சயமற்ற நிலையும் மக்கள் மனதிலிருந்து நீங்கும்பட்சத்தில், நுகர்வு அதிகரிக்க துவங்கும்.
இதையடுத்து தனியார் துறை முதலீடுகள் அதிகரிக்கும்.புவிசார் அரசியல் உள்ளிட்ட வேறு புற பாதிப்புகள் ஏற்படாதபட்சத்தில், இந்திய பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் ஏற்றம் பெறும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|