பதிவு செய்த நாள்
16 பிப்2022
21:46
புதுடில்லி:பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்.ஐ.சி.,யில், உரிமை கோரப்படாத தொகை மட்டுமே, 21 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக இருப்பது தெரியவந்துள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு அண்மையில் விண்ணப்பித்து உள்ளது. இதற்கான விண்ணப்பத்தில், நிறுவனத்தில் 21 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு, உரிமை கோரப்படாத தொகை
இருப்பதாக குறிப்பிட்டு உள்ளது. இது, இந்த தொகைக்காக பெறப்பட்ட வட்டியையும்
சேர்த்ததாகும்.
நிறுவனத்தின் வசம் இருக்கும் இந்த உரிமை கோரப்படாத தொகை, 2020 மார்ச்சில்,
16 ஆயிரத்து 53 கோடி ரூபாயாகவும்; 2021 மார்ச்சில், 18 ஆயிரத்து 495 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.பொதுவாக, ஒவ்வொரு காப்பீட்டாளரும், 1,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட எந்தவொரு கோரப்படாத தொகையைப் பற்றிய தகவலையும், அந்தந்த இணையதளங்களில், 10 ஆண்டுகள் முடிந்த பின்னும் தொடர்ந்து காண்பிக்க வேண்டும்.
மேலும், பாலிசிதாரர்கள் அல்லது பயனாளிகள், நிலுவையில் உள்ள கோரப்படாத தொகையை சரிபார்க்க, இணையதளத்தில் உரிய வசதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்
என்பது விதி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|