பதிவு செய்த நாள்
16 பிப்2022
22:11
சந்திரசேகரன் முதல் உரை
‘‘ஏர் இந்தியாவை, உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனமாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அந்த இலக்கை மிக வேகமாக அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்’’ என, ‘ஏர் இந்தியா’ ஊழியர்களுக்கான தனது முதல் உரையில், ‘டாடா சன்ஸ்’ நிறுவன தலைவர் சந்திரசேகரன் குறிப்பிட்டு உள்ளார்.
வணிக நம்பிக்கை குறியீடு
இந்திய வணிக நம்பிக்கை குறித்த குறியீடு, ஜனவரி- --– மார்ச் காலாண்டில், அதற்கு முந்தைய டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது, 5 சதவீத சரிவைக் கண்டிருப்பதாக, ‘டன் அண்டு பிராட்ஷீட்’ ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவீதம் பேர், மார்ச் காலாண்டில் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மோசடிக்கு பான் எண்
‘தானி லோன்ஸ் அண்டு சர்வீசஸ்’ நிறுவனத்தின் செயலியில், பிறரது பான் எண்ணை பயன்படுத்தி, மோசடி பேர்வழிகள் கடன் பெற்று உள்ளனர். இதற்கு முன், ‘இந்தியா புல்ஸ்’ எனும் பெயரில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் செயலி வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை எவரும் எளிதில் கடன் பெறலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி உள்ளனர் மோசடி பேர்வழிகள்.
விரிவுரை வருமானத்துக்கு வரி
கவுரவ விரிவுரையாளராக வகுப்பு எடுப்பதன் வாயிலாக கிடைக்கும் வருமானத்துக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படும் என, கர்நாடகாவின் ஜி.எஸ்.டி., குறித்த வழக்குகளை விசாரிக்கும் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், விலக்கு அளிக்கப்பட்ட சேவைகளின் கீழ் இது வராது என்றும் தெரிவித்துள்ளது.
பி.எல்.ஐ., திட்டம் கைகொடுக்கும்
சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதியை, 50 சதவீதம் குறைப்பதன் வாயிலாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.50 லட்சம் கோடி ரூபாயை அதிகரிக்க முடியும் என எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.மேலும், இதற்கு அரசின், பி.எல்.ஐ., எனும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டம் கைகொடுக்கும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|