பதிவு செய்த நாள்
17 பிப்2022
20:32
புதுடில்லி:தணிக்கையில் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக, இந்திய செலவு கணக்கியல் கல்வி மையமான ஐ.சி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, இதன் புதிய தலைவர் தேபஷிஸ் மிஸ்ரா கூறியதாவது:தொழில்நுட்பம் என்பது வாய்ப்புகளை உருவாக்குவதாக உள்ளது. அதனால், இந்திய பட்டய கணக்காளர்களின் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ., புதிய தொழில்நுட்பமான பிளாக்செயினை தணிக்கையில் பயன் படுத்த உள்ளது. வளரும் தொழில்நுட்பங்களில் செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் ஆகியவை கவனிக்கதக்கதாக இருக்கின்றன. நாங்கள் தணிக்கையின் போது, பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், ஜம்மு – காஷ்மீர், லடாக் மற்றும் எட்டு மாநில மாணவர்களுக்கான, அனைத்து நிலை சி.ஏ., படிப்பிற்கான கட்டணத்தில், 75 சதவீத கட்டணத்தை, மார்ச் 31, 2025 வரை தள்ளுபடி செய்ய ஐ.சி.ஏ.ஐ., அமைப்பு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|