நாட்டில் உள்ள நிறுவனங்கள் 14.34 லட்சம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் 14.34 லட்சம் ...  கிரிமினல்களை கோடீஸ்வரர்களாக்கிய ‘கிரிப்டோகரன்சி’ நிதி மோசடிகள் கிரிமினல்களை கோடீஸ்வரர்களாக்கிய ‘கிரிப்டோகரன்சி’ நிதி மோசடிகள் ...
கடந்த ஆண்டில் முதலீடுகள் திருப்தி அடைந்த முதலீட்டாளர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
21:23

புதுடில்லி:சிறு நகர, கிராமப்புற பகுதிகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், கடந்த ஆண்டில், தாங்கள் மேற்கொண்ட முதலீடுகள் குறித்து திருப்தி அடைந்திருப்பது, ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.
முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிறுவனமான ‘குரோவ்’ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:கிட்டத்தட்ட 357 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெரும்பான்மையான முதலீட்டாளர்கள், கடந்த 2021ல், தாங்கள் மேற்கொண்ட முதலீடுகளின் செயல்பாடுகள் குறித்து திருப்தி கொண்டிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர், தங்கள் முதலீட்டால் கிடைத்த வருமானத்தில் திருப்தி அடைந்துஉள்ளனர்.மேலும், 30 சதவீதம் பேர், தாங்கள் எதிர்பார்த்ததற்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதேசமயம், 26 சதவீதத்தினர் இழப்பை சந்தித்ததாக கூறியுள்ளனர்.
சிறு நகரங்கள், கிராமப்புறங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள், தங்கள் சேமிப்பில் பெரும்பகுதியை, நிதி சொத்துக்களில் முதலீடு செய்ய விருப்பமாக இருக்கின்றனர். டிஜிட்டல்மயமாக்கலில் அரசு காட்டும் ஆர்வம் காரணமாக, இப்பகுதிகளை சேர்ந்தவர்கள், எளிதாக முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதற்கேற்ப, டிஜிட்டல் முதலீட்டு தளங்கள், வலுவான ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவையும் இருப்பது முதலீடு அதிகரிக்க காரணமாக உள்ளன. நடப்பு ஆண்டில், பங்குச் சந்தை முதலீட்டை பொறுத்தவரை, 56 சதவீதம் பேர், தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துஉள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)