பதிவு செய்த நாள்
17 பிப்2022
21:23
புதுடில்லி:சிறு நகர, கிராமப்புற பகுதிகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், கடந்த ஆண்டில், தாங்கள் மேற்கொண்ட முதலீடுகள் குறித்து திருப்தி அடைந்திருப்பது, ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.
முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிறுவனமான ‘குரோவ்’ மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:கிட்டத்தட்ட 357 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெரும்பான்மையான முதலீட்டாளர்கள், கடந்த 2021ல், தாங்கள் மேற்கொண்ட முதலீடுகளின் செயல்பாடுகள் குறித்து திருப்தி கொண்டிருக்கின்றனர்.
கிட்டத்தட்ட 44 சதவீதம் பேர், தங்கள் முதலீட்டால் கிடைத்த வருமானத்தில் திருப்தி அடைந்துஉள்ளனர்.மேலும், 30 சதவீதம் பேர், தாங்கள் எதிர்பார்த்ததற்கு மேல் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதேசமயம், 26 சதவீதத்தினர் இழப்பை சந்தித்ததாக கூறியுள்ளனர்.
சிறு நகரங்கள், கிராமப்புறங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள், தங்கள் சேமிப்பில் பெரும்பகுதியை, நிதி சொத்துக்களில் முதலீடு செய்ய விருப்பமாக இருக்கின்றனர். டிஜிட்டல்மயமாக்கலில் அரசு காட்டும் ஆர்வம் காரணமாக, இப்பகுதிகளை சேர்ந்தவர்கள், எளிதாக முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதற்கேற்ப, டிஜிட்டல் முதலீட்டு தளங்கள், வலுவான ஒழுங்குமுறை அமைப்பு ஆகியவையும் இருப்பது முதலீடு அதிகரிக்க காரணமாக உள்ளன. நடப்பு ஆண்டில், பங்குச் சந்தை முதலீட்டை பொறுத்தவரை, 56 சதவீதம் பேர், தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துஉள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|