கடந்த ஆண்டில் முதலீடுகள் திருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் கடந்த ஆண்டில் முதலீடுகள் திருப்தி அடைந்த முதலீட்டாளர்கள் ...  மொபைல் பயனர்கள் டிசம்பரில் 1.28 கோடி சரிவு மொபைல் பயனர்கள் டிசம்பரில் 1.28 கோடி சரிவு ...
கிரிமினல்களை கோடீஸ்வரர்களாக்கிய ‘கிரிப்டோகரன்சி’ நிதி மோசடிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2022
21:26

புதுடில்லி:கடந்த ஆண்டில், கிரிமினல்கள் வசம் இருந்த சட்டவிரோத ‘கிரிப்டோகரன்சி’யின் மதிப்பு, கிட்டத்தட்ட 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
‘பிளாக்செயின்’ தரவு நிறுவனமான ‘செயினாலிசிஸ்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:குற்றவாளிகள் பலரை கோடீஸ்வரராக்கி உள்ளது, கடந்த ஆண்டு. இதற்கு கிரிப்டோகரன்சி எனும் மெய்நிகர் நாணயங்கள் உதவியாக இருந்துள்ளன. கடந்த 2020 இறுதியில், குற்றச் செயல் புரிபவர்கள் வசம் 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிரிப்டோகரன்சி நிதி இருந்தது.
இது 2021ம் ஆண்டில், 82 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியாக உயர்ந்துஉள்ளது. இது ஆதாரங்கள் இருக்கக்கூடிய, அறியப்பட்ட சட்டவிரோத நிதியின் அளவாகும்.கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி, கிரிமினல்களால் களவாடப்பட்ட நிதியின் மதிப்பு மட்டும், 73 ஆயிரத்து, 500 கோடி ரூபாய். இது, கிரிமினல் வசம் இருக்கும் மொத்த தொகையில் 93 சதவீதமாகும்.
இதற்கு அடுத்தபடியாக சட்டவிரோதமான பொருட்களை விற்பனை செய்வதன் வாயிலாக, 3,350 கோடி ரூபாயை கடந்த ஆண்டில் திரட்டி உள்ளனர்.இதேபோல், மோசடி கடைகள் வாயிலாக, கிட்டத்தட்ட 1,450 கோடி ரூபாயை சுருட்டி உள்ளனர்.இந்த குற்றவாளிகளின் இருப்பு தொகை, கடந்த ஆண்டு முழுதும் மிகுந்த ஏற்ற – இறக்கத்துடன் இருந்துள்ளது.
குறைந்தபட்சமாக ஜூலை மாதத்தில் 49 ஆயிரத்து 500 கோடி ரூபாயும்; அக்டோபரில் 1.11 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)