பதிவு செய்த நாள்
17 பிப்2022
21:27
புதுடில்லி:நாட்டில் உள்ள மொத்த மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த டிசம்பரில் 1.28 கோடி சரிவை கண்டுள்ளது என, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் ‘ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா’ ஆகிய நிறுவனங்கள், தங்களுடைய வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவைக் கண்டுள்ளன. ஆனால், ‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ அதிகபட்சமாக டிசம்பரில் 1.29 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதையடுத்து மொத்த வாடிகையாளர் எண்ணிக்கை 41.57 கோடியாக குறைந்துள்ளது.
வோடபோன் ஐடியா 16.14 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்து, 26.55 கோடி வாடிக்கையாளர்களுடன் உள்ளது.மாறாக, ஏர்டெல் வாடிக்கையாளர் எண்ணிக்கை 4.75 லட்சம் அதிகரித்து, 35.57 கோடியாக உயர்ந்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|