பதிவு செய்த நாள்
18 பிப்2022
20:32
புதுடில்லி:கடந்த 2021ம் ஆண்டு முடிவில், ‘டாலர் மில்லி யனர்கள்’ அதாவது, கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்க்கு மேல் தனிப்பட்ட சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை, 11 சதவீதம் உயர்ந்து, 4.58 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக, ‘ஹுருன்’ நிறுவன அறிக்கை தெரிவித்து உள்ளது.இருப்பினும் அவர்கள் சந்தோஷம் குறைந்து உள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், பலர் முந்தைய ஆண்டைவிட குறைவான சந்தோஷத்துடன் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 350 பேர்களிடம் சர்வே எடுக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழிலிலும் சந்தோஷமாக இருந்ததாக தெரிவித்தவர்கள் எண்ணிக்கை, 2020ல் 72 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டில் 66 சதவீதமாக குறைந்துவிட்டது.
மும்பை 20 ஆயிரத்து, 300 கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து, டெல்லி, கோல்கட்டா உள்ளன.சர்வே மேற்கொண்டவர்களில் 19 சதவீதம் பேரே, நன்கொடையாளர்களாக உள்ளனர்.
மூன்றில் இரண்டு பேர்கள், தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்க விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதில் முதலிடம் பிடித்துள்ளது அமெரிக்கா. அடுத்து பிரிட்டன், நியூசிலாந்து, ஜெர்மனி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நான்கில் ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காரை மாற்றுவதாக தெரிவித்துள்ளனர். அவர்களது முதல் விருப்பமாக ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ கார் உள்ளது.மூன்றில் இருவரிடம், நான்குக்கு மேற்பட்ட வாட்சுகள் உள்ளன. ‘ரோலக்ஸ்’ வாட்சை அதிகம் பேர் விரும்புகின்றனர்.
‘தாஜ்’ ஹோட்டல் மற்றும் ஆபரணங்களுக்கான நிறுவனமான ‘தனிஷ்க்’ ஆகியவையும் இவர்களின் விருப்பத் தேர்வில் முதலிடத்தில் உள்ளன. இவ்வாறு ஹுருன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|