பதிவு செய்த நாள்
18 பிப்2022
20:42
புதுடில்லி:உலகளவில் போலியான பொருட்கள், தரக்குறைவான பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்து வரும் சந்தைகள் மற்றும் நிறுவனங்கள் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த, ‘அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள்’ அமைப்பு, 2021ம் ஆண்டுக்கான உலகளவில் மோசமான சந்தைகள் பட்டியலை வெளியிட்டுஉள்ளது.
பேச்சுவார்த்தை
இதில், இந்தியாவை சேர்ந்த பிரபலமான மின்னணு வர்த்தக நிறுவனமான இந்தியாமார்ட் டாட் காம் நிறுவனம் மற்றும் பாலிகா பஜார், ஹீரா பன்னா, ஹிதர்பூர், டேங்க் ரோடு ஆகிய சந்தைகளும் இடம்பெற்றிருக்கின்றன.அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு, வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும், வெளிநாட்டு அரசாங்கங்களுடன் நேரடி யாக பேச்சுவார்த்தை நடத்துவதற்குமான ஓர் அமைப்பாகும்.
கடந்த 2021ம் ஆண்டு, மோசமான சந்தைகள் பட்டியலில், உலகளவில் 42 ஆன்லைன் நிறுவனங்கள், 35 ஆப்லைன் சந்தைகள் இடம்பெற்றுள்ளன.இவ்வமைப்பு, இந்தியா மார்ட் டாட் காம் குறித்து குறிப்பிடுகையில், இந்நிறுவனம், இத்தகைய போலியான பொருட்களை அதன் தளத்தில் விற்பனை செய்பவர்களை அறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என குறிப்பிட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த ஹீரா பன்னா ஷாப்பிங் சென்டர் – கோல்கட்டாவின் ஹிதர்பூர் பேன்ஸி மார்க்கெட் ஆகியவை போலி வாட்சுகள், காலணிகள், அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை அதிகம் விற்பனை செய்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.டெல்லி பாலிகா பஜார், டேங்க் ரோடு சந்தைகளும் இத்தகையதே என தெரிவித்துள்ளது.
திருட்டு பொருட்கள்
இது குறித்து, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய் கூறியதாவது:உலகளாவிய போலி மற்றும் திருட்டுப் பொருட்களின் வர்த்தகம், அமெரிக்காவின் முக்கியமான கண்டு பிடிப்பு மற்றும் படைப்பாற்றலின் மதிப்பை குறைப்பதாக உள்ளது. இத்தகைய கள்ளப் பொருட்கள், உலகளவில் தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|