பதிவு செய்த நாள்
18 பிப்2022
20:48
புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 5.8 சதவீதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது.அதேசமயம், முழு ஆண்டுக்கான வளர்ச்சி 8.8 சதவீதமாக குறைக்கப் பட்டு உள்ளது. இது 9.3 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்புகளுக்கு முன்னர் இருந்த நிலையை விட தனியார் நுகர்வு குறைவாக இருப்பதால், உள்நாட்டு பொருளாதார மீட்சி இன்னும் பரந்த அளவில் இல்லை. டிராக்டர், இருசக்கர வாகன விற்பனை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே சரிவை கண்டு வருகிறது.
நகர்புறங்களில் நுகர்பொருள் சாதனங்கள், பயணியர் வாகன விற்பனை ஆகியவை, மூன்றாவது காலாண்டில் சரிவை கண்டுள்ளன.இவை போன்ற காரணங்களால், இயல்பான பணப்புழக்கம் ஏற்பட இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய புள்ளியியல் அலுவலகம், மூன்றாவது காலாண்டுக்கான மதிப்பீட்டை 28ம் தேதியன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|