உலகளவில் மோசமான சந்தைகள் பட்டியல் இடம்பெற்ற இந்திய பிரபல சந்தைகள் உலகளவில் மோசமான சந்தைகள் பட்டியல் இடம்பெற்ற இந்திய பிரபல சந்தைகள் ... மூன்றாவது காலாண்டில்  வளர்ச்சி 5.8 தவீதம் எனகிறது எஸ்.பி.ஐ., மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 5.8 தவீதம் எனகிறது எஸ்.பி.ஐ., ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 5.8 சதவீதம் என்கிறது எஸ்.பி.ஐ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2022
20:48

புதுடில்லி:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், 5.8 சதவீதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என, எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக உயர வாய்ப்பு உள்ளது.அதேசமயம், முழு ஆண்டுக்கான வளர்ச்சி 8.8 சதவீதமாக குறைக்கப் பட்டு உள்ளது. இது 9.3 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்புகளுக்கு முன்னர் இருந்த நிலையை விட தனியார் நுகர்வு குறைவாக இருப்பதால், உள்நாட்டு பொருளாதார மீட்சி இன்னும் பரந்த அளவில் இல்லை. டிராக்டர், இருசக்கர வாகன விற்பனை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே சரிவை கண்டு வருகிறது.
நகர்புறங்களில் நுகர்பொருள் சாதனங்கள், பயணியர் வாகன விற்பனை ஆகியவை, மூன்றாவது காலாண்டில் சரிவை கண்டுள்ளன.இவை போன்ற காரணங்களால், இயல்பான பணப்புழக்கம் ஏற்பட இன்னும் தாமதமாகும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய புள்ளியியல் அலுவலகம், மூன்றாவது காலாண்டுக்கான மதிப்பீட்டை 28ம் தேதியன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)