பதிவு செய்த நாள்
18 பிப்2022
21:26
புதுடில்லி: ‘வேதாந்தா ’நிறுவனம், இந்தியாவில், 1.50 லட்சம் கோடி ரூபாயை, ‘செமிகண்டக்டர்’ வணிகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்திய நிறுவனமான வேதாந்தா, ‘எலக்ட்ரானிக் சிப்’ மற்றும் ‘டிஸ்ப்ளே’ உற்பத்திக்காக முதற்கட்டமாக 1.13 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளது.பின் முதலீட்டை 1.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.வேதாந்தா குழும நிறுவனமான ‘அவன்ஸ்ட்ரேட்’, செமிகண்டக்டர் வணிகத்தை மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து, செமிகண்டக்டர் பிரிவின் நிர்வாக இயக்குனர் ஆகர்ஷ் ஹெப்பர் கூறியதாவது:செமிகண்டக்டர் ஒரு நீண்ட கால வணிகமாகும். டிஸ்ப்ளேவுக்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம்.செமிகண்டக்டர் தயாரிப்புக்காக, முதலில் 52 ஆயிரத்து, 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளோம். அடுத்து விரிவாக்கத்தின் போது, கூடுதலாக 22 ஆயிரத்து 500 கோடி ரூபாயை செலவிட உள்ளோம். இதன் பின் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் அவன்ஸ்ட்ரேட் நிறுவனம், செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே தயாரிப்புக்கான ஆலைகளை அமைக்க அரசுக்கு விண்ணப்பித்துள்ளது. மேலும், இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிப்புக்காக, ‘பாக்ஸ்கான்’ நிறுவனத்துடன் வேதாந்தா ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|