பதிவு செய்த நாள்
18 பிப்2022
21:34
சென்னை:‘அப்பு ஹோட்டல்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான, ‘லீ ராயல் மெரிடியன்’ ஹோட்டலை, ‘எம்.ஜி.எம்., ஹெல்த்கேர்’ நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து உள்ளது.
அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், லீ ராயல் மெரிடியன் என்ற நட்சத்திர ஹோட்டல்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், அது வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, இந்த ஹோட்டலை ஏலம் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் நிறுவன தலைவர் ராஜகோபால், 423 கோடி ரூபாய்க்கு கையகப் படுத்த முன்வந்தார். இந்த திட்டத்திற்கு, திவால் செயல்முறை சட்டங்களின்படி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தது.இதை எதிர்த்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன தலைவர் பழனி பெரியசாமி மனு தாக்கல் செய்தார்.
மனுவில், ‘1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை, 420 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்து வது நியாயமற்றது. ‘கடனை திருப்பி செலுத்த தயாராக இருக்கிறோம். எனவே, ஓட்டலை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம், லீ ராயல் மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|