மூன்றாவது காலாண்டில்  வளர்ச்சி 5.8 தவீதம் எனகிறது எஸ்.பி.ஐ., மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 5.8 தவீதம் எனகிறது எஸ்.பி.ஐ., ...   ‘வீடுகளுக்கான நுகர்வோர்களிடம் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது’ ‘வீடுகளுக்கான நுகர்வோர்களிடம் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது’ ...
லீ மெரிடியன் ஹோட்டலை கையகப்படுத்தும் திட்டம் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2022
21:34

சென்னை:‘அப்பு ஹோட்டல்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான, ‘லீ ராயல் மெரிடியன்’ ஹோட்டலை, ‘எம்.ஜி.எம்., ஹெல்த்கேர்’ நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து உள்ளது.
அப்பு ஹோட்டல்ஸ் நிறுவனம், லீ ராயல் மெரிடியன் என்ற நட்சத்திர ஹோட்டல்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், இந்திய சுற்றுலா நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாததால், அது வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, இந்த ஹோட்டலை ஏலம் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் நிறுவன தலைவர் ராஜகோபால், 423 கோடி ரூபாய்க்கு கையகப் படுத்த முன்வந்தார். இந்த திட்டத்திற்கு, திவால் செயல்முறை சட்டங்களின்படி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்தது.இதை எதிர்த்து, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், அப்பு ஹோட்டல்ஸ் நிறுவன தலைவர் பழனி பெரியசாமி மனு தாக்கல் செய்தார்.
மனுவில், ‘1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை, 420 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்து வது நியாயமற்றது. ‘கடனை திருப்பி செலுத்த தயாராக இருக்கிறோம். எனவே, ஓட்டலை கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.இதை விசாரித்த தீர்ப்பாயம், லீ ராயல் மெரிடியன் ஹோட்டலை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் நிறுவனம் கையகப்படுத்தும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)