பதிவு செய்த நாள்
19 பிப்2022
19:28
சென்னை:வீடுகளுக்கான சந்தை, அடுத்த இரண்டு ஆண்டுகளில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களினால் உந்து சக்தி பெறும் என, ‘சுந்தரம் ஹோம் பைனான்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லட்சுமிநாராயணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:வீடுகளுக்கான சந்தை, நடப்பு ஆண்டில், நிலைத்த வளர்ச்சியை காணும். வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் சிறிய நகரங்களின் வளர்ச்சி ஆகியவை, இதற்கு காரணமாக அமையும்.வீடுகளுக்கான சந்தை, இரண்டாவது அலைக்கு பின் வேகம் எடுத்துள்ளது. வீடு வாங்குவோர் மத்தியில் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது என்பது, புதிய திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
நடப்பு ஆண்டில், தொற்றுநோய் பரவலுக்கு முந்தைய நிலைக்கு திரும்பும்.கொரோனா பாதிப்புகளுக்கு பின், உடல்நலம், சுகாதாரம் ஆகியவை குறித்த அக்கறையால், நுகர்வோர் விசாலமான வீடுகள் குறித்து தங்கள் பார்வையை திருப்பி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|