பதிவு செய்த நாள்
19 பிப்2022
19:34
புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, சில்லரை முதலீட்டாளர்களிடமிருந்து, 25 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.
இதையடுத்து, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கும் அண்மையில் விண்ணப்பித்துள்ளது.இந்நிலையில் அனுமதி கிடைத்து விடும் பட்சத்தில், மார்ச் 11ம் தேதி, துணிகர பங்கு முதலீட்டாளர்களுக்கான வெளியீடு இருக்கும் என இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்நிறுவனம் டிமேட் கணக்கு வைத்திருக்கும் நபர்களில், ஏழில் ஒருவரை முதலீடு செய்ய வைப்பதன் வாயிலாக, கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், அரசின் கணிப்புப்படி, மொத்தம் 7.38 கோடி பேரிடம் டிமேட் கணக்கு உள்ளது.தற்போது தன்னுடைய பாலிசிதாரர்களை பங்கு வெளியீட்டில் பங்கேற்க செய்வதற்காக, டிமேட் கணக்கு துவங்குமாறு எல்.ஐ.சி., கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து, டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 8 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவர்களில், குறைந்தபட்சம் 75 லட்சத்திலிருந்து ௧ கோடி பேராவது எல்.ஐ.சி., பங்குகளை வாங்க விண்ணப்பிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|