‘வீடுகளுக்கான நுகர்வோர்களிடம் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது’ ‘வீடுகளுக்கான நுகர்வோர்களிடம் புதிய நம்பிக்கை எழுந்துள்ளது’ ...   ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனம்: வேகமெடுக்கும் திவால் நடவடிக்கை ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனம்: வேகமெடுக்கும் திவால் நடவடிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சில்லரை முதலீட்டாளர்களில் 7ல் ஒருவரை ஈர்க்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2022
19:34

புதுடில்லி:எல்.ஐ.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, சில்லரை முதலீட்டாளர்களிடமிருந்து, 25 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது.
இதையடுத்து, பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கும் அண்மையில் விண்ணப்பித்துள்ளது.இந்நிலையில் அனுமதி கிடைத்து விடும் பட்சத்தில், மார்ச் 11ம் தேதி, துணிகர பங்கு முதலீட்டாளர்களுக்கான வெளியீடு இருக்கும் என இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்நிறுவனம் டிமேட் கணக்கு வைத்திருக்கும் நபர்களில், ஏழில் ஒருவரை முதலீடு செய்ய வைப்பதன் வாயிலாக, கிட்டத்தட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், அரசின் கணிப்புப்படி, மொத்தம் 7.38 கோடி பேரிடம் டிமேட் கணக்கு உள்ளது.தற்போது தன்னுடைய பாலிசிதாரர்களை பங்கு வெளியீட்டில் பங்கேற்க செய்வதற்காக, டிமேட் கணக்கு துவங்குமாறு எல்.ஐ.சி., கேட்டுக்கொண்டுள்ளது.
இதையடுத்து, டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 8 கோடியாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவர்களில், குறைந்தபட்சம் 75 லட்சத்திலிருந்து ௧ கோடி பேராவது எல்.ஐ.சி., பங்குகளை வாங்க விண்ணப்பிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)