பதிவு செய்த நாள்
19 பிப்2022
20:39
சர்வதேச தர சைக்கிள்களுக்கான இந்தியாவின் முன்னணி நிறுவனம் பீட்டில் பைக்குகள், இந்திய குழந்தைகளுக்கு சர்வதேச தரம் கொண்ட மிதிவண்டிகளை வழங்குவதோடு, எளிதான அசெம்பிளி மற்றும் பழுதுபார்ப்புக்கான நவீன நகர்ப்புற வீட்டு தேவைகளை பூர்த்தி செய்கிறது.
உலகளாவிய தரம் மற்றும் குறைந்த எடை கொண்ட வாகனங்கள் மிதிவண்டி நிபுணர்களாக குழந்தைகளை மாற்றுகின்றன. ஒவ்வொரு தேவைக்கும் மற்றும் வயதினருக்கும் ஏற்ற வகையில், 10 வகைகளில் குழந்தைகளுக்கான சைக்கிள்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஹெல்மெட்கள், பாட்டில்கள் மற்றும் பின்புற விளக்குகள் போன்ற பாகங்கள் வழங்கப்படுகின்றன.
மிதிவண்டிகள் ‘செமி அசெம்பிள்’ வடிவில் பொதுவாக டெலிவரி செய்யப்படுவதால், இணைய வழியில் வாங்கும்போது பெற்றோருக்கு இருக்கும் முக்கிய கவலைகளில் ஒன்று அதை எப்படி அசெம்பிள் செய்வது என்பதுதான். சில பெற்றோர்கள் அருகில் உள்ள சைக்கிள் கடைக்கு அதை எடுத்துச் சென்று அங்கே அசெம்பிள் செய்கிறார்கள், இன்னும் பல பெற்றோர்கள் தாங்களாகவே அசெம்பிள் செய்கிறார்கள். வீட்டிற்கே வந்து வழங்கப்படும் அசெம்பிளி சேவை மூலம் பெற்றோர்கள் மிதிவண்டியுடன் அசெம்பிளி சேவையையும் தற்போது ஆர்டர் செய்யலாம் என்பதோடு அசெம்பிளி செயல்முறை பற்றி கவலைப்படத் தேவையில்லை.
பைக் டெலிவரி செய்யப்பட்டவுடன், பயிற்சி பெற்ற சேவை தொழில்நுட்ப வல்லுநர் வாடிக்கையாளருக்கு உகந்த நேரத்தை நிர்ணயம் செய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட நேரத்தில் வீட்டிற்கே வருவார். தொழில்நுட்ப வல்லுநர் வீட்டிலேயே முழு பைக்கை அசெம்பிள் செய்து அதை உடனடியாகப் பயன்படுத்தத் தயார் செய்வார்.
இது குறித்து பீட்டில் பைக்குகளின் இணை நிறுவனர் யோகேஷ் சௌஹான் கூறுகையில், “எங்கள் வண்டிகளை 85% அசெம்பிள் வடிவில் டெலிவரி செய்வதால், எங்களின் அறிவுறுத்தல் கையேடு அல்லது எங்களின் யூடியூப் அசெம்பிளி வீடியோக்கள் மீதமுள்ளவற்றை அசெம்பிள் செய்வதை ஒப்பீட்டளவில் எளிதாக்குகிறது. இருப்பினும், பெற்றோர்கள் தாங்களாகவே அதைச் செய்து முடிக்க நேரமில்லாத சந்தர்ப்பங்களில், விரைவாக பைக்கைத் தயார்படுத்துவதற்கு ஹோம்-அசெம்பிளி சேவை ஒரு சிறந்த வழியாகும்,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|