பதிவு செய்த நாள்
20 பிப்2022
21:19
சொந்த வீடு வாங்குவது தொடர்பாக தீர்மானிக்க முடியாமல் முடிவை தள்ளிப்போட்டு வந்தவர்களில் பெரும்பாலானோர், வீடு வாங்க தீர்மானித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் ரியல் எஸ்டேட் சூழல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட, இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் அனராக் நுகர்வோர் ஆய்வு, வீடு வாங்குவது தொடர்பாக குழப்பத்தில் இருந்தவர்களில் 63 சதவீதத்தினர், கொரோனா பாதிப்புக்கு பின்னர் சொந்த வீடு வாங்க தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கிறது.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 28 சதவீதத்தினர், பெரிய பரப்பளவு கொண்ட வீட்டை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இதற்கு முன் இத்தகைய விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு போன்றவை இதற்கான காரணமாக அமைகிறது.
வீடு வாங்க திட்டமிட்டு உள்ளவர்களில் 63 சதவீதத்தினர், 45 லட்சம் முதல், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வரையிலான மதிப்பு கொண்ட வீட்டை வாங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் குடியிருப்புகளையும், சிறிய நகரங்களில் இருப்பவர்கள் வீட்டு மனை வாங்குவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|