பதிவு செய்த நாள்
20 பிப்2022
21:25
பி.பி.எப்., எனப்படும் பொது சேமநல நிதி, சிறு சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. ஓய்வு காலத்திற்கான சேமிப்பு திட்டமான இது வரிச் சலுகை அளிப்பதால், வரி சேமிப்பு சாதனமாகவும் பிரபலமாக விளங்குகிறது.
வரிச் சேமிப்பிற்கான திட்டமிடல் என்று வரும் போது, முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்படுகிறது. நீண்ட கால சேமிப்பு திட்டம் என்ற முறையில் பல்வேறு தனித்தன்மையான அம்சங்களை கொண்டிருந்தாலும், வரிச் சேமிப்பிற்காக பி.பி.எப்., பரவலாக நாடப்படுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.
முழு சலுகை:
வரிச் சேமிப்பிற்கான முதலீடு மீதான வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உள்ளாகலாம். ஆனால், பி.பி.எப்., முதலீட்டை பொறுத்தவரை, முதலீடு, வட்டி வருமானம் மற்றும் முதிர்வு காலத்தில் விலக்கிக் கொள்ளும் போது என அனைத்து கட்டங்களிலும் வரிச் சலுகை அளிப்பதாக அமைவதால், முழு வரி விலக்கு அளிக்கிறது.
அதிக வட்டி:
நிரந்தர வருமானம் அளிக்கும் பிரிவில், வருங்கால வைப்பு நிதியான பி.எப்., தற்போது அதிக வட்டி அளிக்கிறது. ஆனால், இந்த வாய்ப்பை, சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்ததாக அதிக வட்டி அளிக்கும் பி.பி.எப்., திட்டத்தில், சுய வேலை செய்பவர்களும் இணையலாம்.
மாறும் விகிதம்:
ஐந்தாண்டு வைப்பு நிதியை விட பி.பி.எப்., அதிக பலன் அளிக்கிறது. இதற்கு காரணம், மாறும் வட்டி விகிதத்துடன் தொடர்பு கொண்டிருப்பது தான். வைப்பு நிதியால் முழு காலமும் வட்டி நிலையாக இருக்கும். பி.பி.எப்., வட்டி காலாண்டிற்கு ஒரு முறை மாறுவதால், குறைந்த வட்டி சூழலிலும் ஏற்றதாக அமையும்.
பாதுகாப்பு அம்சம்:
வரிச் சலுகை பெறுவதோடு, பாதுகாப்பை விரும்பும் இடர்களை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு பி.பி.எப்., அதிக பலன் அளிக்கிறது. ஐந்தாண்டு வைப்பு நிதியை விட கூடுதல் பலன் அளிக்கிறது. மேலும், செல்வ மகள் திட்டம் போல குறிப்பிட்ட பிரிவினருக்கு என இல்லாமல் அனைவரும் அணுகலாம்.
கூட்டு வட்டி:
இத்திட்டம் நீண்ட கால நோக்கிலானது. பதினைந்து ஆண்டு காலத்தில் முதிர்வடைகிறது; அதன் பிறகும் நீட்டித்துக் கொள்ளலாம். இடைப்பட்ட ஆண்டுகளின் முதலீடு மற்றும் வட்டி வருமானம் மீது கூட்டு வட்டியின் பலனை அளிக்கிறது. அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக அமைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|