பீட்டில் பைக்ஸ் அறிமுகப்படுத்தும் குழந்தைகளுக்கான அசெம்ப்ளி வீட்டுச் சேவைபீட்டில் பைக்ஸ் அறிமுகப்படுத்தும் குழந்தைகளுக்கான அசெம்ப்ளி வீட்டுச் ... ... ஆயிரம் சந்தேகங்கள்: எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 'டிமேட்'  கட்டாயம் தேவையா? ஆயிரம் சந்தேகங்கள்: எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 'டிமேட்' கட்டாயம் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வரி சேமிப்பிற்காக பி.பி.எஅதிகம் நாடப்படுவது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2022
21:25

பி.பி.எப்., எனப்படும் பொது சேமநல நிதி, சிறு சேமிப்பு திட்டங்களில் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. ஓய்வு காலத்திற்கான சேமிப்பு திட்டமான இது வரிச் சலுகை அளிப்பதால், வரி சேமிப்பு சாதனமாகவும் பிரபலமாக விளங்குகிறது.

வரிச் சேமிப்பிற்கான திட்டமிடல் என்று வரும் போது, முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்படுகிறது. நீண்ட கால சேமிப்பு திட்டம் என்ற முறையில் பல்வேறு தனித்தன்மையான அம்சங்களை கொண்டிருந்தாலும், வரிச் சேமிப்பிற்காக பி.பி.எப்., பரவலாக நாடப்படுவதற்கான காரணங்களை பார்க்கலாம்.

முழு சலுகை:


வரிச் சேமிப்பிற்கான முதலீடு மீதான வட்டி வருமானம் வரி விதிப்புக்கு உள்ளாகலாம். ஆனால், பி.பி.எப்., முதலீட்டை பொறுத்தவரை, முதலீடு, வட்டி வருமானம் மற்றும் முதிர்வு காலத்தில் விலக்கிக் கொள்ளும் போது என அனைத்து கட்டங்களிலும் வரிச் சலுகை அளிப்பதாக அமைவதால், முழு வரி விலக்கு அளிக்கிறது.

அதிக வட்டி:

நிரந்தர வருமானம் அளிக்கும் பிரிவில், வருங்கால வைப்பு நிதியான பி.எப்., தற்போது அதிக வட்டி அளிக்கிறது. ஆனால், இந்த வாய்ப்பை, சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அடுத்ததாக அதிக வட்டி அளிக்கும் பி.பி.எப்., திட்டத்தில், சுய வேலை செய்பவர்களும் இணையலாம்.

மாறும் விகிதம்:

ஐந்தாண்டு வைப்பு நிதியை விட பி.பி.எப்., அதிக பலன் அளிக்கிறது. இதற்கு காரணம், மாறும் வட்டி விகிதத்துடன் தொடர்பு கொண்டிருப்பது தான். வைப்பு நிதியால் முழு காலமும் வட்டி நிலையாக இருக்கும். பி.பி.எப்., வட்டி காலாண்டிற்கு ஒரு முறை மாறுவதால், குறைந்த வட்டி சூழலிலும் ஏற்றதாக அமையும்.

பாதுகாப்பு அம்சம்:

வரிச் சலுகை பெறுவதோடு, பாதுகாப்பை விரும்பும் இடர்களை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு பி.பி.எப்., அதிக பலன் அளிக்கிறது. ஐந்தாண்டு வைப்பு நிதியை விட கூடுதல் பலன் அளிக்கிறது. மேலும், செல்வ மகள் திட்டம் போல குறிப்பிட்ட பிரிவினருக்கு என இல்லாமல் அனைவரும் அணுகலாம்.

கூட்டு வட்டி:

இத்திட்டம் நீண்ட கால நோக்கிலானது. பதினைந்து ஆண்டு காலத்தில் முதிர்வடைகிறது; அதன் பிறகும் நீட்டித்துக் கொள்ளலாம். இடைப்பட்ட ஆண்டுகளின் முதலீடு மற்றும் வட்டி வருமானம் மீது கூட்டு வட்டியின் பலனை அளிக்கிறது. அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றதாக அமைகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)